districts

img

நெசவு பூங்கா நிலத்தை மீட்டுத் தர மனு

நாமக்கல், ஜூலை 13- குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா இடத்தில், ஆக்கிரமிப்பு செய்த  நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மாவட்ட வருவாய் அலுவலரிடம் பூங்கா  நிர்வாகிகள் சனியன்று  புகார் அளித்துள்ள னர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே அருவங்காடு என்ற பகுதி உள்ளது. அங்கு குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப  நெசவு பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த  பூங்காவிற்கு சொந்தமான இடத்தில் தனி நபர் கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பல முறை பூங்கா நிர்வாகிகள் சொல் லியும், அவர்கள் கேட்பதாக இல்லை. இத னால், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவ லர் சுமனிடம், பூங்கா நிர்வாகிகள்  புகார் மனு  கொடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் வசமி ருந்து, பூங்கா இடத்தை மீட்டுத் தருமாறு புகார்  மனு கொடுத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைபடி உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என வருவாய் அலுவ லர் கூறியுள்ளார்.