சேலம், ஏப்.1- நிலத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்கள் மீது நடவ டிக்கை எடுத்து, நிலத்தை மீட்டு தர வேண் டும் என பாதிக்கப்பட்டவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தார். அம்பேத்கர் மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாதுரை தலைமையில், கருப்பூர் பரவக்காடு பகுதியைச் சேர்ந்த கோபி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த னர். ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்துவிட்டு புகார் மனு ஒன்று அளித்த பின் செய்தியாளர்களிடம் கோபி கூறுகை யில், பரவக்காடு பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு ஆகியவற்றை நான் சொந்த மாக சம்பாதித்து வாங்கினேன். முதல் மனைவி இறந்துவிட்டதால், இரண்டாவதாக முத்துலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தேன். ஒரு ஏக்கர் நிலத்தில் முதல் மனைவி குடும்பத்தாருக்கு 60 சென்ட் நிலமும், மீதி 40 சென்ட் நிலத்தை நான் வைத்துக் கொண்டிருந்தேன். இந்நி லையில், முதல் மனைவியின் மகன்கள் மீதியி ருந்த 40 சென்ட் நிலத்தையும், வீட்டையும் தனது பெயருக்கு மாற்றி தரச்சொல்லி வற்பு றுத்தி வந்தனர். ஆனால், அவ்வாறு செய்ய இயலாது எனக்கூறியதற்கு, என்னை தரக் குறைவாக பேசியது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், நிலம் மற்றும் வீட்டின் ஆவணங்களை சட்ட விரோதமாக என்னிடமிருந்து பறித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேற்றினர். இதனால் வயதான நானும், இரண்டாவது மனைவி மற்றும் குழந் தைகள் வாழ முடியாமல் நடுத்தெருவில் நிற்கி றோம். எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகு றித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலத் தையும், வீட்டையும் மீட்டுத்தர வேண்டும், என்றார்.