நாமக்கல், நவ.12- கொல்லிமலை, கு.குளிப்பட்டி முதல் எருமப்பட்டி வழியாக நாமக் கல் வரை, குதிரை சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர வேண் டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை வட்டத்திற்குட்பட்ட சேலூர் நாடு, தின்னனூர் நாடு, தேவனூர் நாடு பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். தங் கள் பகுதியில் இருந்து சமவெளி பகுதிக்கு செல்ல சுமார் நான்கு மணி பயண நேரம் ஆகிறது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாவட்ட தலை நகர் வருவதற்கு சுமார் 90 கிலோ மீட் டருக்கு மேல் பயணம் செய்ய வேண் டிய நிலை உள்ளது. விபத்து, பிரச வம், மாரடைப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மருத்துவம னைக்கு செல்லக்கூடிய வழியி லேயே மரணம் நிகழ்வது வாடிக் கையாக உள்ளது. விவசாய விளைப் பொருட்களை சந்தைப்படுத்துவ தற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண் டிய நிலை உள்ளது. சேலூர் நாடு மணப்பாறை சந் தையில் இருந்து குதிரை சாலைக்கு வருவதற்கு வெறும் இரண்டு கிலோ மீட்டர் தூரமே உள்ளது. இப்பொ ழுது நீண்ட தூரம் பயணித்து மணப் பாறை சந்தைக்கு வியாபாரிகள் வராததால், விவசாயிகள் தங்கள் விலைக்கு பொருட்களை சொற்ப விலைக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, அரப் பளீஸ்வரர் கோவில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்டவைக ளுக்கு குளிப்பட்டி குதிரை சாலை யிலிருந்து வெறும் ஏழு கிலோமீட் டர் தூரமே. இதை அடைவதற்கு சேலூர் நாடு குழிப்பட்டி முதல் எரு மப்பட்டி வழியாக நாமக்கல் வருவ தற்கு பிரிட்டிஷ் காலத்தில் அமைக் கப்பட்ட குதிரை சாலையை மீண் டும் பயன்படுத்துவதால் மாவட்ட தலைநகர் வருவதற்கு வெறும் 34 கிலோ மீட்டர் தூரமே ஆகிறது. இத னால் சுமார் 46 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்வது மீதம் ஆகிறது. இதன் மூலம் ஏற்படக்கூடிய பொருள் மற்றும் நேர விரையமும் சேமிக்கப் படுகிறது. பொதுமக்கள் தங்கள் அன்றாடப் பணிகள் மற்றும் மருத்து வம், விவசாயப் பொருட்களை கொண்டு சென்று வர, அரசு அலுவ லகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றுவர பயண நேரம் குறை கிறது. எனவே, குதிரை சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, சேலூர் நாடு, தின்னனூர் நாடு மற்றும் தேவானூர் நாடு ஊர் பொது மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்த னர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஊரக முகமையின் முதன்மை பொறியா ளரை அணுக அறிவுறுத்தினார். இதன்பின் மாவட்ட ஊரக முகமை யின் முதன்மை பொறியாளர் சிவ குமாரிடம் வேலூர் நாடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சர்க்கரை என்கிற கே.கே.பழனிச்சாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஏ.டி.கண்ணன், ஏ.ரங்கசாமி, கொல்லிமலை தாலு காச் செயலாளர் எஸ்.தங்கராசு, ஒன் றியக்குழு உறுப்பினர் ஏ.பன்னீர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் செல்வராஜ், பொன்னுசாமி ஆகி யோர் கலந்து கொண்டனர். இதன் பின் சம்பந்தப்பட்ட சாலையை உட னடியாக ஆய்வு செய்து, சாலை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப் பட்டது.