கோவை, ஜன.8- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தில் வீடு வழங்க கோரி ஆவாரம்பாளையம் அருகில் உள்ள இ.பி காலனி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக அம்மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் அருகில் இ.பி காலனி என்ற பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரு கிறார்கள். தற்பொழுது அவர்கள் வசித்து வரும் பகுதி ஓடை புறம்போக்கு என்று கூறி வீட்டை இடிக்க மாநக ராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் வசித்த சில பேருக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டு விட் டது. ஆனால் இன்னும் பல குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீட்டுமனை ஒதுக்க வில்லை. மாற்று இடம் வழங்குவதற்கு முன்பே ஆக்கிர மிப்பு என்கிற பெயரில் நாள்தோறும் அதிகாரிகள் அச் சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். மேலும், தற்போது மின் இணைப்பையும் துண்டித்து விட்டார்கள். எனவே, இம்மக்களின் குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் குடிசை மாற்று வாரியத்தில் வீட்டு மனை வாங்கித் தருவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு முன்பாக தற்பொழுது வசித்து வரும் வீட்டை இடிக்காமல் பாதுகாத்து தர வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் வீட்டுமனை இல்லாதவர்க ளின் பெயர் பட்டியலை தயார் செய்து தரக் கோரியும், அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித் தார். முன்னதாக இந்த மனு அளிக்கம் இயக்கத்தில், இந் திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தினேஷ் ராஜா, பீளமேடு நகரக் குழு செயலாளர் சக்தி வேல் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.