கோபி, ஜூன் 14- தேசிய ஊராக வேலை உறுதியளிப்பு திட் டத்தில் வேலை வழங்க வேண்டி கோபி அருகே அளுக்குளி ஊராட்சி மன்றத் தலைவ ரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடுமாவட்டம் கோபி அருகே உள்ள அளுக்குளி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 2024-25 ம் ஆண்டிற்க்கான தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அளுக்குளி ஊராட்சி குடும்ப உறுப்பினர்க ளுக்கு சட்டப்படி பணி வழங்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் இந்துமதியி டம் மனு அளித்தனர்.