districts

img

வீட்டுமனை பட்டா கேட்டு மனு

தருமபுரி, மார்ச் 5- இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பனைகுளம் கிராம மக்கள் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட் டம், பென்னாகரம் வட்டம், பனைகுளம் கிராமத்தில் ஏரா ளமான ஏழை மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும்பங்களில் பலருக்கு விவசாய நிலம் இல்லை. பல ருக்கு சொந்த வீடு இல்லை. இதனால் ஒரே வீட்டில்  இரண்டு, மூன்று குடும்பங்களாக குடியிருந்து வரு கின்றனர். மழைக்காலங்களில் குடிசை வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது. கூலி வேலை செய்து வரும் இப்பகுதி மக்கள், தங்களது குழந்தைகளை படிக்க வைக்கவும், நடைமுறை செலவுக்கே பற்றாக் குறையில் குடும்பம் நடத்த வேண்டியுள்ளது. எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, அரசு வீடு வழங்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.