districts

img

நீலகிரியில் பெர்சிமன் பழ சீசன் துவங்கியது

உதகை, ஆக.31- நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெர்சி மன் பழ சீசன் தொடங்கி உள்ளது. இதன்படி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழங்கள் காய்த்து  தொங்குகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் இங்கிலாந்து நாட்டைப் போன்ற சீதோசன நிலை நிலவியதால் அங்கு வளரக்கூடிய பயிர் வகைகள், பழங்கள், மலர் களை இங்கும் பயிரிட்டு வளர்த்து வந்தனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காய், ஆரஞ்சு, லிச்சி, பிளம்ஸ், பீச்,  லில்லி உள்பட பல்வேறு வகையான பல  மரங்கள் நடவு செய்யப்பட்டன. இந்த வகை  மரங்கள் அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப வளர்ந்து பழங்கள் கொடுக்கும். இந்த வகை யில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெர்சி மன் பழ சீசன் தொடங்கியுள்ளது. குன்னூர்  சிம்ஸ் பூங்காவில் உள்ள பழப்பண்ணையில் பெர்சிமன் பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்குகின்றன.

இதையொட்டி குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழங்கள் விற்பனைக்கு அதிகளவில் வந்து  உள்ளன. இதுகுறித்து குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகை யில், கடந்த 1952 ஆம் ஆண்டு ஆஸ்திரேலி யாவில் இருந்து பெர்சிமன் பழ நாற்று  கொண்டு வரப்பட்டு, குன்னூர் தோட்டக் கலை பண்ணையில் நடவு செய்யப்பட்டது. இதனை ஆதாம்-ஏவாள் பழம் என்றும் அழைப் பார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு இந்த  மரவகை பழமை வாய்ந்ததாக கருதப்படு கிறது. மேலும், இது ஜப்பான் நாட்டின் தேசிய பழம் ஆகும். இதனை சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றன. தக்காளியை போன்று தோற்றம் கொண் டுள்ள இந்த பழம் மருத்துவ குணம் கொண்ட தாக கருதப்படுகிறது. இந்த பழமானது கண் பார்வை குறைபாடு, மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றை தீர்க்க உகந்ததாக கூறப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிக ரிக்கும். இது தவிர வைட்டமின் சி சத்து அதி களவில் உள்ளது. இந்த பழம் குன்னூர் பழவி யல் நிலையத்தில் கிலோவுக்கு ரூ.170 வரை  விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், பல ருக்கும் தற்போது வரை இந்த பழங்கள் குறித்து தெரியாது. இதற்கிடையே பெர்சிமன் பழம் மற்ற பழங்களைப் போல நேரடியாக சாப்பிட முடி யாது. மரத்திலிருந்து பறித்து ஒருநாள் முழு வதும் எத்தனால் திரவத்தில் ஊற வைக்க  வேண்டும். அதன் பிறகு அதனை எடுத்து கழுவி தோலை உறித்து சாப்பிட வேண்டும், என்றார்.