உடுமலை, டிச.2- குடிமங்கலம் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள் மீது ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் விதி முறைகளை மீறி பாலங்கள் மற்றும் சாலைகள் அமைத்து உள்ளனர். இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க் கும் பொதுப்பணித்துறை அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை, குடிமங்கலம் பகுதி யில் பரம்பிக்குளம் பாசனத் திட்டத் தின் படியும், மடத்துக்குளம் பகுதி யில் அமராவதி அணையின் பாசன கால்வாய்கள் மூலமும் தண்ணீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி அணையில் இருந்து முதன்மை கால்வாய் முதல் கடைக்கோடி விவசாயிகளுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல அரணி வாய்க்கால்கள் பொதுப்பணித் துறையினர் கட்டுப்பாட்டில் உள் ளது. இந்த கால்வாய்களில் பராம ரிப்பு வேலைகள் செய்ய வேண்டும் என்றால் முறையாக அனுமதி பெற வேண்டும். இப்படி பல கட்டுப்பாடு கள் கொண்ட கால்வாய்கள் முறை யான பராமரிப்பு இல்லாமல் உள் ளன. மேலும், பொதுப்பணித்துறை யினரின் கவனக்குறைவால் பல இடங் களில் கால்வாய்கள் வரைபடத்தில் மட்டுமே உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிகரித்துள்ளதால், விவ சாய நிலங்கள் வீட்டுமனையாக மாறி வருகிறது. வீட்டுமனைகளுக்கு செல்ல முதன்மை கால்வாய்களின் குறுக்கே கனரக வாகனங்கள் செல்லும் வகை யில் பாலங்கள் மற்றும் கால்வாய்க ளின் கரைகளில் சாலைகள் கட்டப் பட்டு வருகிறது. இந்த பாலங்கள் கட்ட பொதுப்பணித்துறையினர் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கி னார்கள் என்று தெரியவில்லை. ஆனால், சிறிய கால்வாய்களின் இடையே விவசாயிகள் பாசன குழாய் மற்றும் மின்கம்பங்கள் கொண்டு செல்ல அனுமதி உண்டு என்ற விதி இருந்தும், விவசாயிகளி டம் சில அதிகாரிகள் பொதுப்பணித் துறையின் தடையில்லா சான்று கேட் கின்றனர். ஆனால் கால்வாய்களின் மீது யார் கொடுத்த அனுமதியில் பாலங்கள் கட்டப்படுகிறது என்று தெரியவில்லை. பொதுப்பணித்துறை யின் அதிகாரிகளால் இப்பகுதியில் இருக்கும் கால்வாய்கள் அழியும் நிலையில் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கால்வாய் களை ஆய்வு செய்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.