சென்னை, ஜூன் 24- பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு மீண்டும் பதவி வழங்கினால், அதனைத் தடுத்து நிறுத்துவோம் என்று சட்டப் பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி தெரி வித்தார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் பேரா சிரியர்கள் தொடங்கிய தனியார் நிறுவனமான பூட்டர் பவுண் டேஷன் மற்றும் பூட்டர் பார்க் நிறுவ னங்கள் மூலம் பயிற்சி கல்வி பாடத்திட்டம் வழங்குவது தொடர் பாக பல தனியார் நிறுவனங்க ளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் மோசடி மற்றும் முறைகேட்டில் ஈடுபடு வதாக புகார் எழுந்தது. அதன்பேரில், பல்கலை துணை வேந்தர் ஜெகநாதன் கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று கருப்பூர் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் நிபந் தனை ஜாமினில் விடுவிக்கப்பட் டார். எனினும் ஜெகநாதனுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி உறுதுணை யாக இருந்து வருகிறார். மேலும், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வும் ஆளுநர் முடிவு செய்துள் ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சட்டப்பேரவை யில் நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஷாந வாஸ், “சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் மீது குற்றச்சாட்டு உள்ளதை அந்தக் குழுவே ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார். மேலும், உயர்கல்வித்துறை சார்பாக நீதிமன்றத்தை நாடியுள் ளதாக கூறிய அமைச்சர், ஜெக நாதன் பதவிக்காலம் முடியும் தரு வாயில் உள்ளதாகவும், அதற்கு முன்பாகவே அவர் மீது வழக்கு இருக்கும் போதே தமிழ்நாடு ஆளுநர் சேலம் பல்கலைக்கழகத் திற்கு சென்று அந்த துணைவேந் தருடன் உரையாடி உள்ளதாக வும், அது அனைத்துப் பத்திரிக்கை களிலும் வெளிவந்துள்ளது என் றும் சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழகத்தில் தவறு நடந்து உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், தமிழக அரசு இதில் கவனமாக செயல்பட்டு வருவதாக வும், அவர் மீண்டும் துணைவேந்த ராக நியமிக்கப்படாமல் இருப்பதை தடுத்து நிறுத்துவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரி வித்தார்.