districts

img

“அரசு மருத்துவமனையின் தரத்திற்கு கிடைத்த சான்று”

உதகை, டிச.21- உதகை அரசு மருத்துவமனை யில் சிக்கலான ரத்த நாள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகையை  அடுத்த எமரால்டு பகுதியை சேர்ந் தவர் சகுந்தியா (28). இவர் கடந்த  டிச.13 ஆம் தேதியன்று விறகு  வெட்டும் பணியில் ஈடுபட்டிருந் தார். அப்போது கவனக்குறைவாக   அவரது இடது கையில் அறிவாள்  வெட்டு விழுந்தது. இதனால்  அதீத ரத்தபோக்கும், வலியும்  அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு உதகை  அரசு மருத்துவமனையில் சிகிக் சைக்காக சேர்த்தனர். அங்கு  அவரை மருத்துவர்கள் பரி சோதனை செய்ததில், இடது கையில் ஆழமான வெட்டு காயங்கள் இருந்தது. மேலும், தசைநார்கள் கிழிந்தும், கைக்கு செல்லும் முக்கிய ரத்த குழாய் முழுவதும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் அவரது கை யின் ஒரு பாதி உணர்ச்சி இல்லா மலும், கை அசைவுகள் குறைந்தும் இருந்தது. இதன் காரணமாக உடனடியாக சகுந்தியாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அறுவை சிகிச்சை நிபுணரும், தலைமை மருத்துவருமான கார்த்திகேயன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ், அசோக் விக்னேஷ், சரண்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற் கொண்டனர். சுமார் 3½ மணி நேரம்  நடைபெற்ற அறுவை சிகிச்சை யில் அறுபட்ட ரத்தகுழாய், சிரை  குழாய் ஒட்டு மூலம் சீரமைக்கப் பட்டது. மேலும் நரம்பு, தசை நார்களும் சரி செய்யப்பட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டது. தற்போது சகுந்தியா நன்றாக உடல் நலம் தேறி வருகிறார். தற்போது அவருக்கு பிசியோ தெரபி பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உதகை மருத்து வக்கல்லூரி முதல்வர் மனோகரி கூறுகையில், ரத்த குழாயில் செய் யப்படும் நுண் அறுவை சிகிச்சை பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே நடந்து வந்தது. ரத்த நாளங்களில் செய்யப்படும் சிக்க லான அறுவை சிகிச்சை நீலகிரி  மாவட்டத்தில் தற்போது தான் முதல்  முறையாக செய்யப்பட்டுள்ளது. அதையும் வெற்றிகரமாக நிகழ்த் திய மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி இந்த  மருத்துவமனையின் தரத்திற்கு கிடைத்த சான்றாகும். வெட்டுக் காயம் அடைந்த பெண் நன்றாக குணமடைந்துவிட்டதால், விரை வில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், என்றார்.