districts

img

உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்

திருப்பூர், ஜன.21 - மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.1500-லிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கோரி திருப்பூர், உடுமலை, தாராபுரம் ஆகிய  பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப் பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று  தமிழ்நாடு முழுவதும் சிறை நிரப்பும்  போராட் டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபு ரம், உடுமலை என 3 மையங்களில் சிறை  நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில்,  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித் தொகையை ரூ.1500-லிருந்து ரூ.6ஆயிரமாக  உயர்த்தி வழங்க வேண்டும். கடும் மாற்றுத்தி றனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக அண்டை மாநிலங்களான ஆந்திரா, ஜார்கண்ட், தெலுங்கானா, பாண் டிச்சேரி போல உயர்த்தி வழங்க வேண்டும்.  ஊரக வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு 4 மணி நேர வேலை சட்டத்தை மீண் டும் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், திருப்பூரில் மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, மாநிலக்குழு உறுப்பி னர் சஞ்சீவ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரோசி, லோகநாதன், கமலக்கண்ணன், பிர காஷ் உட்பட 50 ஆண்களும் 30 பெண்களும் கலந்து கொண்டனர். தாராபுரத்தில் நடந்த போராட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜெய பால் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பாத் திமா, சுரேஷ், முருகன், பாட்ஷா, மற்றும் தொழிற்சங்க தலைவர் என்.கனகராஜ் உட்பட  70 ஆண்கள் 20 பெண்கள் கலந்து கொண்ட னர். உடுமலைப்பேட்டையில் நடந்த போராட் டத்தில் மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ்,  மாவட்டப் பொருளாளர் மாலினி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் குருசாமி, மணி, முத்துக் குமார் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் கன கராஜ், ஜெகதீஷ், சசிகலா உட்பட 85 பெண் கள் 90 ஆண்கள்  கலந்து கொண்டனர்.