கோவை, பிப்.5- வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித கழி வுகளை கலந்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி கோவை யில் முற்போக்கு அமைப்பினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், வேங் கைவயல் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித கழிவுகளை கலந்து, அதனை மக்கள் அறியாமல் பயன்படுத்தி 300க்கும் மேற்பட்ட வர்களின் உடல்நிலை பாதிக்கப்பட் டது. இந்த செயலை செய்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியு றுத்தி பல்வேறு அமைப்புகள் மாநி லம் முழுவதும் கண்டன இயக்கங் களை நடத்தி வருகின்றனர். மேலும், மனித மலம் கலக்கப்பட்ட குடிநீர் மேந்நிலைத் தொட்டியை முழுவது மாக இடிக்க வேண்டியும், கோரிக்கை வலுப்பெற்று வந்த நிலையில், புதுக் கோட்டை மாவட்ட நிர்வாகம் அரசு அதனை இடிப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதாக தெரிவித்தும், புதிய தண்ணீர் தொட்டியை கட்ட நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. இந்நிலையில் குற்றவாளிகள் இதுநாள் வரையில் கன்டறியாமல் காவல் துறை பாதிக்கப்பட்ட மக் களை மட்டுமே தீவிரமாக, விசரானை என்கின்ற பெயரில் துன்புறுத்தி வரு கின்றனர்.
இந்தப்போக்கை கைவிட வேண்டும். காவல் துறையினர் குற்ற வாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிய, அம்பேத்கரி, பெரி யாரிய அமைப்பினர் சனியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமை வகித்தார். ரத்தினகுமார் வரவேற்புரையாற்றினார். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் யு.கே.சிவ ஞானம், புரட்சி கர இளைஞர் முன் னணியின் தமிழ் நம்பி, மக்கள் அதி காரம் அமைப்பின் ஜீலீஸ், திராவி டர் விடுதலைக் கழகம் நேருதாஸ், சிபிஐ (எம்எல்) அமைப்பின் பால சுப்பிரமணியன், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, இந் திய மாணவர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கயல்விழி, மாவட்ட செய லாளர் அசாருதீன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.