உடுமலை, ஆக.17- 22 ஆம் நூற்றாண்டிலும், மரத்தின் மேல் காய்ந்த மரங் களால் மக்கள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கொழுமத்திற்கு அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடர் ஆய்வுகளை செய்து வருகின்றார்கள். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது, கொழு மம் வனசரகத்திற்கு உட் பட்ட ராயர் குளம் பகுதி யில் விவசாயிகள் பூர்வ குடிகளாக வாழ்ந்து வரு கிறார்கள். இங்கு வாழும் மக்கள் காட்டு விலங்குகளைக் கண்டு அச்சம் கொள்வதில்லை. மேலும், எந் தெந்த நேரங்களில் எந்தெந்த விலங்கு கள் வரும் என்பதனையும் தெளிவாக அறிந்துணர்ந்து வைத்துள்ளனர். மலை யிலிருந்து தண்ணீர் குடிக்க வரும் யானைகள் தென்னை மரங்களை மட் டுமே சாய்ப்பதையும் மற்ற மரங்களை எதுவும் செய்யாமல் செல்வதை குறிப் பிட்டுச் சொல்கின்றனர். மேலும், இந்த வேப்பமரத்தில் தாங்கள் கட்டியிருக்கும் மரக்குச்சிகளால் ஆன வீடு மழைக்கா லங்களிலும், வெயில்காலங்களிலும் தாங்கள் வசிப்பதற்கு மிகவும் பாது காப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மரத்தின் மேல் உள்ள கிளைகளை ஒதுக்கி மரக்கிளைகளைக் கொண்டே இடைவெளியை ஏற்படுத்தி, மரக்குச்சி களை ஒன்றோடு ஒன்று சேர்த்து இறுக் கிக் கட்டி விடுகின்றனர். இந்த மரங்கள் அனைத்தும் ஒரே அளவில் இருக்கும் வகையில் அமைத்துக்கொள்கின்றனர். குச்சிகளின் உயரமும், தடிமனும் ஒரே அளவில் இருக்கிறது. இந்த மரத்தின் மேல் அமைக்கப்ப டும் மரக்குச்சி வீடுகளின் இயற்கை யாகக் கிடைக்கும் பனை ஓலைகளை மேய்ந்து அதன் மேல் பிளாஸ்டிக் காகி தங்களை போட்டுக்கொள்கின்றனர். எந்த மழை வந்தாலும் இவர்களுக்கு எதுவும் ஆவதில்லை. மரம் ஒடிந்த விழுகாத வரை எந்த சிக்கலும் இல்லை என் கின்றனர். மேலும் இதனை நிரந்த ரமாகப் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக மேலே ஏறி இறங்கி வருகின்றனர். மிருகங்களின் தொல்லை என நாம் நினைத்தால் இவர்கள் நிலத்தில் கல், மண் கொண்டு கட்டுவதைக் காட்டிலும் இது மிகவும் எளிமையாகவும், சிக்கனமாகவும் இருப் பதாகக் கூறுகின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் குறைந்தது மூன்று முதல் ஐந்தாறு பேர் வரை இதனுள் ஒரே சமயத்தில் படுத்துறங்கலாம். அந்த அளவிற்கு உறுதியாகவும், வசதியா கவும் இந்த மரக்குச்சி வீட்டினை அமைத் துள்ளனர். மேலும் இரண்டு மரக்குச்சி வீடுகள் கட்டி ஒன்று சமையலுக்காகவும் இன் னொரு அறை படுக்கை அறையாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த இரண்டு மரக்குச்சி வீடும் ஒரே மரத்தில் இருப்ப துதான் வியப்பு. இந்த மரக்குச்சி வீடு கள் குறித்த அளவினதாக இல்லாமல் மரக்குச்சிகளின் நீள அகலங்களைப் பொறுத்து பத்துக்கு எட்டடியாகவும், எட்டுக்கு ஆறடியாகவும் அமைந்தி ருக்கின்றனர் என்றனர்.