ஈரோடு, ஜன.13- ஈரோட்டில், சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் திங்களன்று நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில், மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா ஈரோடு சூரம்பட்டிவலசில் நடை பெற்றது. கே.எஸ்.இஸாரத்தலி, டி. ஜான் சாமுவேல், எஸ். சிவஞானம் ஆகி யோர் தலைமை ஏற்றனர். இதில், தமி ழக மக்கள் ஒற்றுமை மேடை மாநி லக்குழு உறுப்பினர் கே.துரைராஜ், சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, கருடா ஹோம்ஸ் எம்.ரவிச்சந்திரன், ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத் தின் முன்னாள் செயலாளர் பாலசுப்பிர மணியன், மதரஸா உயர்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் என்.முகமது ஹனிபா, மூத்த வழக்கறிஞர் பி.கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.