districts

img

போராடி வீட்டுமனை பெற்றுத்தந்த மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு மக்கள் நன்றி!

தருமபுரி, மார்ச் 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டத்தால் தருமபுரி யில் நடைபெற்ற அரசு விழாவில், கள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 30 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்குட்பட்டது கள்ளிபுரம் கிழக்கு, கள்ளிபுரம் மேற்கு கிராமங் கள். இக்கிராங்களில் கணிசமாக பட்டி யலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவ சாய நிலமற்ற கூலி தொழிலாளர்கள். பலருக்கு சொந்த வீடு இல்லை. முன் னோர் கட்டிய வீடுகளில் இரண்டு, மூன்று தடுப்புகளாக பிரித்து அதில் வசித்து வருகின்றனர். இக்கிராமத் தின் அருகிலுள்ள வருவதனஅள்ளி கிராமத்திலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இப்பகுதி மக்களுக்கு இல வச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண் டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியே றும் போராட்டம் நடைபெற்றது. அதன் பின் பென்னாகரம் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு பல கட்ட போராட்டங் கள் நடத்தப்பட்டன. இதன் விளை வாக தருமபுரி அரசு கலைக்கல்லூரி யில் நடைபெற்ற அரசு நலத்திட்ட  உதவிகள் வழங்கும் விழாவில், கள்ளி புரம் கிழக்கு, மேற்கு கிராமங்களைச் சேர்ந்த 30 நபர்களுக்கு முதற்கட்ட மாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் வீட்டுமனைப்பட்டாக்களை வழங் கினார். மீதமுள்ள நபர்களுக்கு இரண் டாம் கட்டமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது. இதைத்தொடர்ந்து, இலவச வீட்டுமனை பெற்ற மக்கள் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக் கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நன் றியை தெரிவித்துள்ளனர்.