districts

img

சனாதனத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும்

தருமபுரி, மே 4- சனாதனத்திற்கு எதிராக அனை வரும் போராட வேண்டும் என தமு எகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா அழைப்பு விடுத்துள் ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் சார் பில் தருமபுரி பெரியார் மன்றத் தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எ.கொ.அம்பேத் கர் தலைமை ஏற்றார். மாவட்ட செய லாளர் ம.சிங்காரவேல் வரவேற் றார். மாவட்ட நிர்வாகிகள் சுகந்தி பாஸ்கரன், வேலகணபதி, ஜெயரா மன், மாரியப்பன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  கருத்தரங்கை துவக்கி வைத்து  மாவட்ட துணைத்தலைவர் கு.சிவப் பிரகாசம் உரையாற்றினார். இதில் தமுஎகச பொதுச்செயலாளர் கவி ஞர் ஆதவன் தீட்சண்யா, மாநில துணை பொதுச்செயலாளரும், திரைக்கலைஞருமான ரோகினி ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர் நவகவி, மாவட்ட பொருளாளர் ஆதி முதல்வன் ஆகி யோர் கவிதை வாசிப்பும், மாண வர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில், தகடூர் புத் தக பேரவை தலைவர் இரா.சிசு பாலன், மக்களுக்கான மருத்துவ  சங்க தலைவர் மருத்துவர் க.பகத் சிங், பேராசிரியர் அ.முருகதாஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஆசிரியர் ம. பழனி, மாவட்ட செயலாளர் பெ. துரைராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், “சனாதனமும், சமூகநீதி யும்” எனும் தலைப்பில் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட் சண்யா பேசுகையில், சனாதனம் என் பது என்றுமே மாறாதது. இந்த சனா தனம், ஆரிய வேத பாண்பாடு  தோன்றி வெறும் 4 ஆயிரம் வருடங் கள் தான் ஆகிறது. சனாதனம் பெண்ணைவிட ஆண் உயர்வான வன் என்று சொல்கிறது. ஆணுக்கு, பெண் அடிமையானவள் என்று சொல்கிறது‌. சனாதன தர்மம் இந்தி யாவில் பாலியல் பாகுபாடு, பொரு ளதார பாகுபாடு இருக்க வேண்டும் என்று சொல்கிறது. பண்டைய காலத் தில் இயற்கை நீதி இருந்தது. இந்த நீதியை, மனு நீதி சீர் குலைத்தது. மனுநீதியை பின் னுக்கு தள்ளி அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க  சமூக நீதியை பெற மக்கள் சக்தியை ஒன்றி ணைந்து, சனாதனத்திற்கு எதிராக  போராட வேண்டும், என்றார். முடி வில், மாவட்ட நிர்வாகி கார்த்திகே யன் நன்றி கூறினார்.