கோவை, பிப்.7- கோவை சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கைக ளில் கருப்பு கொடி ஏந்தியும், வீடு களில் கருப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் சுற்றுவட்டார பகுதியில் 1000க் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடவு எண் 3ல் ரயில்வே அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் பாதையை பயன் படுத்தி சிவலிங்காபுரம், காமாட்சி நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்தவர்கள் சென்று வரு கின்றனர். ரயில்வே கேட் பகுதி யில் மேம்பாலம் அமைக்க வேண் டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரு கின்றனர். சுமார் 10 ஆண்டுகால மாக இந்த கோரிக்கை இருந்து வரும் நிலையில், இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என அரசின் தரப்பில் முதலில் தெரி விக்கபட்டது. இதைதொடர்ந்து, இந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் எனவும், மேம்பாலம் கட்டப்படாது எனவும் தெரிவிக் கப்பட்டது. இந்நிலையில், ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய் துள்ளதை கண்டித்தும், இப்பகு தியில் மேம்பாலம் அமைக்க வேண் டும் என வலியுறுத்தியும் புதனன்று சூர்யா நகர் பகுதி மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் கைகளில் கருப்பு கொடியுடன் திரண்டனர். சூர்யா நகர் பகுதியில் உள்ள தெருக்களில் ஊர்வலமாக சென்ற மக்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடியேற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழக அரசு இப்பகுதியில் மேம்பா லம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வரும் 20 தேதி ஓண்டிபுதூர் பிர தான சாலையில், இப்பகுதி மக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர்.