districts

img

வெள்ளம் வடிந்தும், வடியாத கண்ணீரோடு காவிரிக்கரையோர மக்கள்

- எம்.பிரபாகரன் - நாமக்கல், ஆக.7- ஒவ்வொரு முறையும், காவிரியில் வெள்ளம் வருகிறபோது, முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறோம், வெள் ளம் வடிந்தபின் வீடு திரும்புகிறோம். ஒவ்வொரு முறையும் நாங்கள் புதிதா கத்தான் வாழ்க்கையை துவங்குகி றோம் என்பதை ஆட்சியாளர்கள் உணர் வதில்லை என்கின்றனர் நாமக்கல் மாவட்ட காவிரிக்கரையோர மக்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு,  கர்நாடக மாநில பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கபிணி அணையில்  திறந்து விடப்பட்ட அதிகப்படியான  உபரிநீர் அப்படியே மேட்டூர் அணை  வந்தடைந்தது. இதன் காரணமாக மேட் டூர் அணை முழு கொள்ளளவை எட் டியது. 16 கண் பாலம் வாயிலாக அப் படியே இரண்டு லட்சத்துக்கும் மேலான கனஅடி வெள்ள நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது.  இதனையடுத்து, நாமக்கல் மாவட் டத்தில்  குமாரபாளையம், பள்ளிபாளை யம் உள்ளிட்ட காவிரி கரையோரங்க ளில் வசித்து வந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதில், நூற்றுக் கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில்  மூழ்கியது. அரசு தரப்பில் இருந்து அவர் களுக்கு தேவையான உணவுகள், மருத்துவ வசதிகள் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது. வெள்ளம் வடிந்த பின் அவரவர் வீடுகளுக்கு திரும் பியுள்ளனர். ஆனாலும், துரத்தும் துய ரம் நீங்கவில்லை என்கின்றனர் அப் பகுதி மக்கள். இதுகுறித்து பாதிப்புக்குள்ளான மக்கள் கூறுகையில், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிக ளில் வசிக்கிறோம். இங்கு மணி மேகலை தெரு கலைமகள் வீதி நாட்டா கவுண்டன் புதூர், ஜனதா நகர், ஆவரங் காடு உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளோம். ஆண்டுதோறும் காவிரி ஆற்றில் வெள் ளம் வரும். அப்போது எல்லாம் வீட்டில்  உள்ள மின்சாதன பொருட்களை பாது காத்து மேடான பகுதிகளில் வைத்து பாதுகாப்போம். வெள்ளம் வடியும் வரை யில் பணிக்கு செல்ல முடியாமல் இருப் போம். வருமானங்களை இழந்து, வாங் கிய கடன்களை திருப்பி செலுத்த முடி யாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்படுவோம்.  சிலர் வீடுகளிலேயே கைத்தறி போன்ற நெசவுத்தொழில் செய்து வரு வதால், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து விடுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பெருத்த கேள்விக்குறியாகி விடுகிறது. தற்போது நீரின் அளவு வெகுவாக  குறைந்து விட்டது. வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கி இயல்பு வாழ்க்கைக்கு  மெல்ல மெல்ல திரும்ப துவங்கியுள் ளோம். வீடுகளில் தேங்கியுள்ள  கழிவு களை அகற்றி வீட்டை சுத்தப்படுத்தி மீண் டும் புதிதாக குடியேறுகிறோம். எதிர் வரும் ஆண்டுகளில் இது போன்ற அசா தாரண சூழ்நிலையை தமிழக அரசு கணக்கில் எடுத்து எங்களுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி பாளையம் ஜனதா நகர் உள்ளிட்ட காவிரி கரையோரம் வசிக்கும் பொது  மக்களுக்கு,  ஊருக்கு ஒதுக்குப்புறமாக  வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ள தால் இன்னமும் ஏராளமான குடும்பத் தினர் அந்த பகுதிக்கு செல்லாத நிலை  உள்ளது. எனவே, காவிரிக்கரையோர பகுதி மக் களுக்கு நகருக்கு அருகாமையில் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும். கரையோர குடியிருப்பு வாசிகளின் கண்ணீரைத் துடைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும், என்றனர்.