districts

img

ஆபத்தான முறையில் ரயில் பாதையை கடக்கும் மக்கள்

இளம்பிள்ளை, ஜன.17- மகுடஞ்சாவடி அருகே மேம்பாலம் இல்லாததால் ஆபத்தான முறையில் ரயில் பாதையை கடக்கும் நிலை உள்ளதால், உயிரிழப்புகள் ஏற்படும் நிலை ஏற் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ரயில் நிலை யத்தை தினமும் பல்வேறு ரயில்கள் கடந்து செல் கின்றன. இந்நிலையில் ரயில் நிலையம் அருகிலுள்ள ஜெயபுரி வீதி, ஆசிரியர் காலனி மற்றும் பட்டகாரர் காடு போன்ற பகுதியிலுள்ள பொதுமக்கள் மகு டஞ்சாவடிக்கு செல்ல  ஆபத்தான முறையில் ரயில்வே  பாதையை சைக்கிள் மற்றும் நடந்து பாதையை கடந்து செல்கின்றனர். இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்டோர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் ரயில் பாதையை கடந்து செல்ல வசதியாக ரயில்வே  தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.