மேட்டுபாளையம், அக்.9- முறையாக குடிநீர் வழங்கப்படா ததை கண்டித்து தேக்கம்பட்டி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 12 ஆவது வார் டுக்குட்பட்ட தேக்கம்பட்டி பகுதியில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய் யப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் செல் லும் சாலையில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த காரமடை வட் டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலை வர் நித்யா நந்தகுமார், காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரன் உள் ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இதில், தங்கள் பகு திக்கு முறையாக குடிநீர் விநியோ கம் செய்யும் வரை தாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என உறுதிபட தெரிவித்தனர். மேலும், அப்பகுதி பெண்களும், பொதுமக்க ளும் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து உடனடியாக குடிநீர் வழங்கப்படும் இனி வரும் காலங்களில் தேக்கம்பட்டி பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகிப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.