பழுதான புதிய கான்கிரீட் சாலை மக்கள் குற்றச்சாட்டு
வால்பாறை, டிச.4- வால்பாறை நகராட்சியில் அமைக்கப்பட்ட புதிய கான் கிரீட் சாலை, அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆங்காங்கே பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் கூட்டுறவு வங்கியிலிருந்து - வாழைத்தோட்டம் ஸ்டாண்மோர் சந்திப்பு வரை சுமார் ரூ.45.90 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கான் கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை அமைக்கும் பொழுது முறையான சிமெண்ட் கலவை செய்யாத கார ணத்தினால், ஆங்காங்கே சாலைகள் பழுதாகி இருப் பதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. இதைத் தொடர்ந்து, மீண்டும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, சாலை புணரமைப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, நகர மன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு, முதலில் அறிவிக்கப்பட்ட தொகையில் சரிவர சாலை அமைக்காமல், தற்போது மீண்டும் அதே சாலைக்கு 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது, மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் வரிப்பணம் இப்படி வீணாவது வேதனை அளிக்கக்கூடிய நிகழ்வாக உள்ளதென சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.
உதகை மார்க்கெட் வலுவிழந்த கடைகள் இடிப்பு
உதகை, டிச.4- வலுவிழந்து காணப்படும் உதகை நகராட்சி மார்க்கெட் கட்டங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. உதகை நகராட்சி மார்க்கெட் கடந்த 80 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட கடை கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலான கடைகள் பழமை வாய்ந்தது என்பதால், தற்போது வலுவிழந்து காணப்ப டுகின்றன. இதனால், இந்த கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக, 190 கடைகள் இடிக்க நகராட்சி நிர்வாக முடிவு செய்து இதற்காக ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்துள் ளது. கடந்த வாரம் முதல் உதகை மார்க்கெட்டில் பூட்டிக் கிடக்கும் கடைகளை இடிக்கும் பணிகள் துவக்கப்பட்டது. அதன்படி, சனியன்று முதல் ஜேசிபி இயந்திரம் மூலம் இந்த கடைகளை இடிக்கும் பணி துவங்கியது. தற்போது ஏடிசி பார்க்கிங் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளுக்கு நகராட்சியில் உள்ள கடைகள் மாற்றப்பட் டால், நகராட்சி ஒரு பகுதி கடைகள் விரைவில் இடித்து விட்டு புதிய கடைகள் பார்க்கிங் தளத்துடன் கட்டப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் துவக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பாலத்தில் தேங்கிய கழிவுகள் அகற்றம்
நாமக்கல், டிச.4- பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றுப் பாலத்தில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் - ஈரோட்டை இணைக்கும் வழியில் இரண்டு பாலங்கள் உள்ளது. இந்நி லையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பள்ளிபா ளையம் பகுதியில் கனமழை பெய்து வருவதால், பள்ளிபா ளையம் புதுப்பாலத்தில், அதிகளவு மணல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் அவதி அடைந்து வரு வதாக, பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நகராட்சி ஊழியர்கள் பாலப்பகுதியில் தேங்கியுள்ள மணல் மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் விழா
சேலம், டிச.4- சேலம் மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயிலும் வகையில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் விரைவில் பயன்பாட் டிற்கு வரவுள்ளதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மே கம், தகவல் தெரிவித்தார். சேலம், தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் மாற்றுத் திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. நிகழ்வில் பங் கேற்று ஆட்சியர் பேசுகையில், செவித்திறன் குறைபாடு உடைய 100 மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் கொண் டப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ. 6.70 கோடி மதிப் பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு பணி நிறைவடைய உள்ளது. சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தொண்டு நிறுவ னங்கள் மூலம் சிறப்புப் பள்ளிகள் மற்றும் மறுவாழ்வு இல்லங் களில் 907 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகின்றனர் என்றார். இந்நிகழ்வில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மகிழ்நன், அஸ்தம்பட்டி மண்டலக் குழுத்தலைவர் செ. உமா ராணி, மாற்றுத்திறனாளிகள் நல சங்கத் தலைவர் அத்தி யண்ணா, மற்றும் தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
சேலம் புத்தகத் திருவிழா டிச. 6 வரை நீட்டிப்பு
சேலம், டிச.4- சேலம் புத்தகத் திருவிழா டிச. 6 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளதாக ஆட்சியர் செ.காா்மேகம் தெரி வித்தார். சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா கடந்த நவ. 21-ம் தேதி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் தொடங்கியது. சேலம் மாவட்டத்தைச் சார்ந்த எழுத்தா ளர்களின் புதிய படைப்புகளை புத்தகத்தி ருவிழா நடைபெறும் நாள்களில் வெளியிடு தல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங் கேற்றுப் பயன்பெறவும், பள்ளிகளில் பயி லும் மாணவர்களை புத்தகக் கண்காட்சி நடை பெறும் இடத்திற்கு அழைத்து வரவும், கலை மற்றும் இலக்கியம் நிகழ்ச்சிகள் நடத்திட வும் ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் ரூ. 1.21 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதுதவிர உள்ளூா் இலக்கியம் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்கும் வகை யில் அரங்குகளில் சேலம் மாவட்ட எழுத்தா ளர்களின் படைப்புகள் காட்சிப்படுத் தப்பட்டன. இந்த நிலையில், சேலம் புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் (டிச.3) நிறைவுபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதனிடையே வாசகா்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, சேலம் புத்தகத் திரு விழா வரும் டிச. 6 ஆம் தேதி வரை, மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு செய்யப்படுவதாக ஆட்சியர் செ.கார்மேகம் அறிவித்துள்ளார்.
கோவையில் டிச.9ல் மக்கள் நீதிமன்றம்
கோவை, டிச.4- கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. அதில், கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்திலும், மேட்டுப்பா ளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக் கரை, சூலூா், அன்னூா் நீதிமன்ற வளாகங்க ளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் டிசம்பா் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்கு கள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், வங்கிக் கடன், கல்விக் கடன் தொடா்பான வழக்குகள், விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்னை வழக்குகள், நிலுவையில் இல்லாத வழக்கு கள் போன்றவற்றுக்கு உடனடி தீா்வு பெற லாம். மக்கள் நீதிமன்றம் முன்பு முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. எனவே, பொதுமக்கள் யாருக் காவது நீதிமன்றங்களில் வழக்குகள் நிலு வையில் இருந்தால் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீா்வு காணலாம். இத்தகைய வழக்குகளுக்கு தீா்வு காண்பதற்காக வரும் 8-ஆம் தேதி வரை சிறப்பு அமா்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்காடிகள் மற்றும் பொது மக்கள் இந்த வாய்பினைப் பயன்படுத்தி தங்க ளது வழக்குகளுக்கு உடனடி தீா்வைப் பெற் றுக் கொள்ளலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாமக்கல்: மாவட்ட அளவிலான கலைப்போட்டி
நாமக்கல், டிச.4- கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, நாமக்கல் லில் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் மாவட்ட அள விலான கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது. குரலிசை, கரு வியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில், நாமக்கல் மாவட்ட அளவிலான போட் டிகள் ஞாயிறன்று நடந்தது. தனிநபராக அதிகபட்சம் 5 நிமி டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி தரப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த 17 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சேலம் மண்டல கலை பண்பாட்டுத்துறை அலுவலக உதவியாளர் மணி கண்டன், சேலம் அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் ராமன், ஈரோடு அரசு இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசி ரியர் கங்கா நாயுடு ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததாக கூறியதால் பரபரப்பு
திருப்பூர், டிச.4- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததாக கூறி யதால், பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட் கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடை பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் மனு அளிப்பதற்கா கவும், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் சேவைகளைப் பெறவும் ஏராளமான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்குள் செயல்படும் கனரா வங்கிக்கு அருகில் உள்ள மின் தூக்கியில் பாம்பு இருப்பதாக பெண் ஒருவர் புகார் தெரிவித் தார். உடனடியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து மின் தூக்கி மின்சாரத்தைத் துண்டித்து பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் வரை தேடிப் பார்த்தும் பாம்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தீயணைப்புத் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு பகு திகளிலும் பாம்பு நடமாட்டம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.
அறிவியல் இயக்கம் கிளை மாநாடு
உடுமலை, டிச.4- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உடுமலைப்பேட்டை கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில், 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பிரிவு, 6 மற்றும் 8 ஆம் வகுப்பு பிரிவு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பிரிவு ஆகிய வகையில் அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் துளிர் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட் டது. ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு நினை வுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, கல்லூரி பேராசிரியர் வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினர். முதுகலை பட்டதாரி ஆசி ரியர் கழகம் மாவட்ட துணைத் தலைவர் வசந்த் பிஎஸ் என்எல் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். கிளைத் தலைவர் ச.செல்லத்துரை தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில், கிளையின் செயலாளர் ம.ஈஸ்வர சாமி வரவேற்று பேசினார். இதைத்தொடர்ந்து, கிளைத் தலை வராக ச.செல்லத்துரை, கிளைச் செயலாளராக ம.ஈஸ்வர சாமி, பொருளாளராக சி.மணி உட்பட துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். உடுமலை சுற்றுப்புறத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் சி.மணி நன்றி கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் விழிப்புணர்வு நாடகம்
திருப்பூர், டிச.4- திருப்பூர் மாநகராட்சி 15-வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்களின் சைகை மொழி தமிழ்த் தாய் வாழ்த்து, விழிப்புணர்வு நாடகம் போன்ற நிகழ்வு கள் திங்களன்று நடைபெற்றது. உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகை யில் திங்களன்று, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 1,331 அரசு மற் றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்கக் கூட்டத்தில் சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்து, மாற்றுத்திறனாளிகளுக்கும், நமக்கும் இடையே உள்ள வேறு பாட்டை களைய ஒற்றுமையை வளர்ப்போம் உறுதிமொழி ஏற்பு, அனைவரும் கற்பதற்கு ஏற்ற மொழி சைகை மொழி, என்ற வகையில் அனைவரும் சைகை மொழி கற்றல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 15-வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாணவ, மாணவியர்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட உறுதி மொழி போல் மாற்றுத்திறனாளி குழந்தைகள் வெற்றி பெற நாம் அனைவரும் உறுதுனையாக இருக்க வேண்டுமென குழந்தைகளிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ந.கீதா, மாவட்ட உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள் ளிக்கல்வி) இலி.அண்ணாதுரை, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் கு.பாலசுந்தரி, வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண் டனர்.
சிறுவழிப்பாதையை அகலப்படுத்துக
மலைவாழ் மக்கள் சங்கம் மனு
தருமபுரி, டிச.4- புறம்போக்கு இடத்தில் அமைந்துள்ள சிறுவழிப்பா தையை, மலைவாழ் பழங்குடி மக்களின் நலன் கருதி அக லப்படுத்தி தார்சாலை அமைத்து தர வேண்டும் என தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், தருமபுரி மாவட்ட ஆட்சி யர் சாந்தியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் மோட்டுப்பட்டி, எலந்தகோட்டப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் சிறுகுறு விவசாயம் செய்து வரு கின்றனர். இந்த கிராமத்தின் அருகே பெரிய காட்டு வடுக்கள் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் ஓரம் அரசு புறம்போக்கு சர்வே எண் 249, 247, 248, 268 நிலத்தில் 65 அடி அகலமுள்ள சிறுவ ழிபாதை உள்ளது. இந்த பாதையில் இந்த இரண்டு கிராம மக்கள் விவசாய நிலத்திற்கு சென்றுவர பல தலைமுறை களாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதை குறுகலான பாதை என்பதால் ஆடு,மாடுகள் சென்று வரவும் விவசாயி கள் நடந்து செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு விளைவிக்கும் பயிர்களை நான்கு சக்கர வாகனத் தில் எடுத்து செல்ல முடியாது நிலை உள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி சிறுவழிபாதையை அகலப்படுத்தி தார்சாலை அமைக்கவேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர். முன்னதாக, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது, நிர்வாகிகள் மணிவண்ணன், பழனி, சம்பத்குமார், ராஜன் மற்றும் கிராம மக்கள் உடனிருந்தனர்.