தருமபுரி, டிச.7- நல்லம்பள்ளி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி அப் பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பண்ட அள்ளி ஊராட்சிக்குட்பட்டது ஜர்க்கான் கொட்டாய் மற்றும் காராஜ் நகர் குடியிருப்பு கிராமங்கள். இந்த இரு கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு, 15 ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பல லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் அமைக்கப்பட்டது. இரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கள் அமைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இன்றளவும், சம்மந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம், இரு கிராமத்தைச் சேர்ந்த குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் வழங் கப்படாமல், கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இதனால் இரு கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்பு மக்கள், குடிநீருக் காக, பல கிலோ மீட்டர் தூரம் கடந்து, மாற்று கிராமங்களுக்கு நாள்தோறும் நடந்தே சென்று, குடங்களில் குடிநீர் எடுத்து வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் இல்லாமல் தவிக்கும், இரு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பல்வேறு பணிக்கு செல்லும் பொதுமக்கள் என பலரும், உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் நாள்தோறும் தவித்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, இரு கிராமங்களில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட் டிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத் தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த இரு கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களும், காலிக்குடங்களுடன் இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கா விட்டால், இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றி ணைந்து, காலிக்குடங்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.