உதகை, ஆக.29- அரசு பேருந்து சேவை நிறுத்தப் பட்டதால் ஆவேசமடைந்த கிராம மக் கள், உதகை பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. நீலகிரி மாவட்டம், இத்தலார் அடுத்த பெம்பட்டி என்னும் கிராமத் தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தினசரி காலை 10 மற்றும் மாலை 4.30 மணிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந் தது. இதனால் பள்ளி கல்லூரி செல் லும் மாணவர்களுக்கு சிரமமாக இருப் பதால் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக் கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ஏற்கனவே இயக்கப் பட்ட 2 பேருந்துகளும் கடந்த 4 மாத மாக சரிவர இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக மாலை 4.30 மணிக்கு உதகையில் இருந்து கிளம்பும் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதாக கூறப் படுகிறது. இதனால் பணி மற்றும் பள்ளி கல்லூரி முடிந்து வீடுகளுக்கு செல்லும் பெம்பட்டி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைய டுத்து ஊர் தலைவர் ஆரி தலைமை யில் திங்களன்று நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் பேருந்து நிலை யத்தை முற்றுகையிட்டனர்.
மேலும், போக்குவரத்து கழக அதிகாரிகளி டம் கிராம மக்கள் கடும் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், ஏற்கனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் தான் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கூடுதலாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், இருப்பதும் சரி வர இயங்காதது அதிர்ச்சி அளிக் கிறது. எங்கள் கிராமத்திற்கு முன் இருக்கக்கூடிய இத்தலார் எனும் ஊர் வரை மட்டும் சில சமயங்களில் பேருந்து வந்து விட்டு அங்கிருந்து திரும்புகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டியுள்ளது. அந்தப் பகு தியில் கரடி, சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பீதியுடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, பொது மக்களை வனவிலங்குகள் தாக்கும் முன்னர் பெம்பட்டி கிராமத்திற்கு சரி யாக பேருந்துகளை இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் பெரிய அளவில் போராட் டம் நடத்துவோம், என்றனர். இதுகுறித்து உதகை மண்டல பொது மேலாளர் நடராஜன் கூறுகை யில், உடனடியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இனிமேல் தினமும் வழக் கம் போல் பேருந்துகள் இயக்கப் படும், என்றார். இதனையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.