districts

img

சிட்கோவில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா

திருப்பூர், ஜன. 17 - இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் 23 ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் விழாவை நடத் தினர். சிட்கோ செல்வகுமார் நினைவுத் திடலில் திங்களன்று நடைபெற்ற இந்த விழாவில் வாலிபர் சங்க கிளை  தலைவர் ராஜேந்திரன், மாதர் சங்க  ஏ கிளைச் செயலாளர் ஜானகி ஆகி யோர் தலைமை வகித்தனர். மாதர்  சங்க மாவட்ட செயலாளர், ஊத்துக் குளி பேரூராட்சி, 7 ஆவது வார்டு உறுப்பினர் சரஸ்வதி மற்றும்  வாலிபர் சங்க முன்னாள் ஒன்றிய செயலாளர் எம்.மகேஷ்வரன் ஆகி யோர் கொடியேற்றி வைத்தனர். வாலிபர் சங்க நிர்வாகிகள் குருநா தன், வி. கனகராஜ் ஆகியோர் உறுதி மொழி வாசித்தனர். வாலிபர் சங்க  தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் ஆசிக் வரவேற்றார். இதில் பெண்கள் மற்றும் இளை ஞர்கள், சிறுவர் சிறுமியருக்கான பல் வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக மந்திர மாக தந்திரமா மேஜிக் ஷோ நடத்தப் பட்டது.

மாலையில் நடனப்போட்டி, பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 19  முறை ரத்ததானம் செய்து உயிர்  காக்கும் பணியை செய்து கொண்டி ருக்கும் எஸ்.சரவணன் சேவையை பாராட்டி  நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு கொரானா பேரிடர் முழு ஊர டங்கு காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மக்க ளுக்கு உணவு சேகரித்து கொடுத்து  மக்கள் பணி செய்த ஏ.செல்வக்கு மார் தியாகத்தை போற்றியும், பாராட் டியும் அவர் குடும்பத்தார்க்கு நினை வுப்பரிசு வழங்கப்பட்டது. முதலிபா ளையம் ஊராட்சியில் பசுமை முதலி பாளையம் அமைப்பின் சார்பில் 1000  மரக்கன்றுகள் நட்டு தொடர்ந்து பராம ரித்து வருகின்ற கே.மணி (எ) முருக சாமி பணியை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சிஐடியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார்,  உட்பட பலர் விழாவில் பங்கேற்ற னர்.