அவிநாசி, ஜூன் 10 - அவிநாசி அருகே உள்ள 3 ஊராட்சிக ளில் ஒரு மாதமாக குடிநீர் வராததை கண் டித்து, அப்பகுதி மக்கள் வெள்ளியன்று காலிக் குடங்களுடன் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின் னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம், பழங்கரை ஆகிய ஊராட்சிகளில் 30 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ஆற்று குடிநீர் வருவதில்லை. இதுகுறித்து பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்ப குதி மக்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத்தலைவர் உட்பட 100க்கும் மேற் பட்டோர், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீ சார் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்பட வில்லை. மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தி னர் வந்து உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி போராட் டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் அன்பரசு, மின்வெட்டு காரணமாக குடிநீர் விநியோகிக்க இயலவில்லை எனக்கூறினார். இதனால் ஆவே சமடைந்த மக்கள் அவரை முற்றுகையிட்டு, இக்காரணத்தை கடிதம் மூலம் எழுதி கொடுக்க வேண்டும் என கடும் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கி ருந்த போலீசாரும், ஒன்றிய நிர்வாகத்தி னரும், ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வழங்கப் படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.