கோவை, ஏப்.17- தகுதியுள்ள அனைவருக்கும் உயரிய பென்சன் வழங்க வலியுறுத்தி, ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க மணியோசை எழுப்பி இபிஎப் பென்சனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு இபிஎப் பென்சனர் கள் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஆர்.நாகராஜன் தலைமை ஏற்றார். இதில், மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.துரை சாமி, ஆர்.செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கோரிக்கை கள் குறித்து மாநில ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் கே.பி.பாபு, மாவட்ட செயலாளர் கே.குமாரசாமி ஆகியோர் உரையாற்றி னர். முன்னதாக, குறைந்தபட்ச பென்சன் பஞ்சப்படியுடன் இணைத்து மாதம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பென்சன் பெற விண்ணப்பம் செய்வதற்கு ஆன்லைன் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திரளா னோர் பங்கேற்றனர். முடிவில், மாவட்ட பொருளாளர் எஸ். ஆர்.மணி நன்றி கூறினார்.