உடுமலை, செப்.19 - மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் 8 ஆவது மாவட்டப் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. உடுமலையில் வியாழனன்று கே.வேலுச் சாமி நினைவு வாளகத்தில் அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 8 ஆவது மாவட்டப் பேரவை மாவட்டத் தலைவர் சண் முகம் தலைமையில் நடைபெற்றது. இதில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இருக்கும் குறைகளை நீக்கி அனைவருக்கும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அனைத்து மருத்துவ வசதி களை பெறும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசுத்துறையில் இருக்கும் காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும். 70 வயது முடித்த ஓய்வூதி யர்களுக்கு 10 சதவீதம் கூடு தல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங் கன்வாடி மற்றும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7.850 வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்க ளுக்கு வருமான வரியிலி ருந்து விலக்களிக்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் பி.சுகுமாறன் துவக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் சோ. பாலகிருஷ்ணன் முன்வைத்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆ. அம்சராஜ் வாழ்த்தி பேசினார். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர் சங்கத்தின் கூட்டமைப்புத் தலைவர் செல்லத் துரை, முன்னாள் மாநிலத் தலைவர் ராஜ்கு மார் மற்றும் கருவூல அலுவலர் சங்கத்தின் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், மாநில துணைத் தலைவர் அரங்க நாதன் நிறை உரையாற்றினார்.