நாமக்கல், ஜூலை 9 - சட்ட விதிகளை பின்பற்றாமல் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றிய நிதி நிறுவனத் திற்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்து நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கணேசபுரத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவர் நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதம் நிதி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சென்னை யில் உள்ள தனியார் (டிவிஎஸ் கிரெடிட் சர்வீஸ்) நிறுவனத்திடம் ரூ.71,393 க்கு கடந்த 2022 நவம்பர் மாதத்தில் கடன் பெற்று இரு சக்கர வாகனத்தை (டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ்) வாங்கினேன். கடன் வழங்கிய நிறுவ னம் எந்த அறிவிப்பும் இன்றி கடந்த 2023 மே மாதத்தில் இரு சக்கர வாகனத்தை பறிமு தல் செய்து விற்பனை செய்து விட்டார்கள். வாகனத்தை விற்ற பின்னரும் கடன் நிலு வைத் தொகையை செலுத்துமாறு நிதி நிறு வனம் நிர்ப்பந்தம் செய்து வருகிறது. கடன் வழங்கிய நிறுவனம் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டது. இதனால் நிதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு, நிதி நிறுவனம் சார்பில் அளித்தி ருந்த பதிலில், கடன் ஒப்பந்தப்படி 24 மாதங்க ளுக்கு மாதத் தவணையாக ரூ.3820 செலுத்து வதாக ஒப்புக்கொண்ட வாடிக்கையாளர், முதல் இரண்டு மாதாந்திர தவணைகளுக் காக காசோலைகளை வழங்கியிருந்தார். அந்த காசோலைகளும் பணம் இல்லை என திரும்ப வந்துவிட்டன. இதன் பின்னர் இரண்டு மாத தவணைகளை காசோலைகள் திரும்ப வந்ததற்கான கட்டணங்களுடன் வாடிக்கை யாளர் செலுத்தினார். அதன் பின்பு நான்கு மாத தவணை தொகைகளை வாடிக்கையா ளர் செலுத்தவில்லை. இதனால் கடன் ஒப்பந் தப்படி சட்ட வழிமுறைகளை பின்பற்றி வாடிக் கையாளரி டமிருந்து வாகனத்தை கைப்பற்றி விற்பனை செய்தோம். தாங்கள் எவ்வித சேவை குறைபாடும் புரியவில்லை என நீதி மன்றத்தில் வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராம ராஜ், உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், வழக்கு தாக்கல் செய்த வர் கடன் ஒப்பந்தப்படி மாத தவணை தொகை களை செலுத்தவில்லை என்பது உறுதி செய் யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் நிதி நிறு வனத்தினர் சட்ட விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை கைப்பற்றி நியாயமான விலைக்கு விற்பனை செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் வாகனத்தை விற்பனை செய்ததற்கு ரூ. 10,254 இழப்பீடாகவும், சேவை குறைபாட் டால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூ.4,668 இழப் பீடாகவும் ரூ.2,000 வழக்கின் செலவு தொகை யாகவும் மொத்தம் ரூ 16,922 நான்கு வார காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்த வாகன உரிமையாளருக்கு நிதி நிறுவனம் வழங்க வேண்டும். இந்தத் தொகையிலிருந்து நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை பிடித்தம் செய்து கொண்டு வழக்கு தாக்கல் செய்தவர் நிதி நிறுவனத்துக்கு எவ் வித தொகையும் செலுத்த வேண்டியது இல்லை என்று சான்றிதழை வழங்குமாறு நீதி மன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.