districts

img

ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குக

கோவை, அக்.1- ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கு மாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  கோவை மாவட்ட பேரவைக் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  கோவை மாவட்ட 16ஆவது பேரவைக்  கூட்டம் எஸ்.ஜெகநாதன் தலைமை யில் தாமஸ் கிளப்பில் நடைபெற்றது.  எஸ்.எம்.வேலுமணி வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் எம்.சீனிவாசன் துவக்கவுரையாற்றினார். செயலாளர் பி.செந்தில்குமார், பொரு ளாளர் பி.நடராஜ் ஆகியோர் அறிக்கை  சமர்ப்பித்தனர். புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  மாநகராட்சி, கராட்சிகளில் நிரந்தர பணி யிடங்களை ஒழித்திடும் அரசாணை 152  ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  பேரவையில், மாநில துணைத் தலைவர் சி.பரமேஸ்வரி நிறைவுரை யாற்றினார். ஆர்.மாலதி ராணி நன்றி கூறினார்.