districts

img

கோவை ஆட்சியராக பவன் குமார் நியமனம்

கோவை, பிப்.9- கோவை மாவட்ட ஆட் சியர் கிராந்திக்குமார் பாடி  பணியிடமாற்றதால், புதிய ஆட்சியராக பவன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத் தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  புதிய கோவை மாவட்ட ஆட்சியராக பவன்குமார்  ஐ.ஏ.எஸ் ஞாயிறன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்க னவே திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றியவர்.  2023 ஆம் ஆண்டில், கிராந்திகுமாருக்கு பதிலாக அவர் அங்கு ஆணையர் பொறுப்பேற்றார். தற்போது, அதே பாணியில் கோவையிலும் கிராந்திகுமாருக்கு பதிலாக புதிய  ஆட்சியராக கோவையில் பொறுப்பேற்கிறார்.