ஈரோடு, செப்.30- விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் போராட்ட அறிவிப் பைத் தொடர்ந்து, 2 மாதங்களில் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என கோட்டாட்சியர் உறுதியளித்துள் ளார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், எழுமாத்தூர், ஆனந்தம்பாளையம், 60, வேலம்பாளையம் ஊராட்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நூறு குடும்பங்களுக்கு இல வச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியே றும் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால், போராட் டம் நடத்திட காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அனுமதி மறுப்பை மீறி, மனித உரிமைப் போராளி தோழர் பி.சீனிவாசராவ் நினைவு நாளான திங்களன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்பேரில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 100 பயனாளிகளுக்கு இரண்டு மாதங்களில் பட்டா கொடுக்கப்படும். எழுமாத் தூர் புதிய காலனி, பழைய காலனியில் உள்ள காலிமனை களை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர்கள் கொண்ட குழு, சங்கத்தின் நிர்வாகிகளுடன் அக்.3 ஆம் தேதியன்று கூட்டாக புலத் தணிக்கை செய்வது, அன்று மாலை வருவாய் கோட்டாட்சியருக்கு அறிக்கை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் அ.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் க.சண்முகவள்ளி, ஒன்றி யத் தலைவர் கணேசன், செயலாளர் தங்கவேலு உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.