சேலம், மார்ச் 12- சேலம் குறிஞ்சி மருத்துவமனை சார்பில் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமனை அரங் கத்தில் நடைபெற்றது. சிஐடியு சேலம் மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கத்தி னர்களுக்கு உயிர் காக்க உதவும் முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறிஞ்சி மருத்துவமனை யில் நடைபெற்றது. இதில் விபத்து ஏற்படும் இடங்களில் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக, விபத்து நடந்த ஒரு மணி நேரத்தில் முதலுதவி கிடைக் காமல், 50 சதவிகித நபர்கள் இறக்கும் சூழ்நிலை உள்ள தாகவும், முதலுதவி செய்பவர்களுக்கு சட்டப்பாது காப்பு அரசு அளிப்பதாகவும் தெரிவித்தனர். முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து வருபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தங்க சன்மானம் வழங்கப்படு வதாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் குறிஞ்சி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஜெயராமன், காவல் உதவி ஆணையர் சர வணக்குமார், சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட சிஐடியு நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.