ஈரோடு, ஜூலை 27- மாயாற்றில் வெள்ளப்பெருக்கால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம் பாளையம் ஆகிய வன கிராமங்கள் உள்ளன. இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள இக்கிராம மக்கள் வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றை பரிசலில் கடந்து சென்று பேருந்து மூலம் பவானிசாகர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு சென்று வருகின்றனர். இதேபோல் இப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும் பரிசலில் சென்று தான் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாயாற்றின் குறுக்கே பாலம் இல்லாத தால் தெங்குமரஹாடா, அல்லிமாயார், கல்லம்பாளையம், சித்திரம் பட்டி கிராம மக்கள் பரிசலில் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,200 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், வன கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வன கிராம மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து சென்று வந்தனர். மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மாயாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தற்போது, மாயாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவ தால் தெங்குமரஹாடா, கல்லம்பாளையம், அல்லிமாயாறு சித்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாயாற்றில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டெம்போ, லாரி உள்ளிட்ட வாக னங்கள் ஆற்றை கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் பரிசல் மூலம் ஆற்றைக் கடக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வேலைக்கும், வியா பாரத்திற்கும் வெளியூர் செல்லும் மக்கள் அவதி அடைந் துள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் மாயாற் றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.