districts

img

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கப்போகும் பெற்றோர்களே! உங்களுக்காகத்தான் இது!

கடந்த மே மாதம் 6 ஆம் தேதி, 2024 ஆண்டுக்கான 12 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. அடுத்தகட்டமாக கல்லுரிகளில் சேர மாண வர்கள் தயாராகி கொண்டிருப்பதை அறி வோம். இந்த 2024-25 கல்வியாண்டில் கலை,  அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக்கல்லூரிகளில் தங்கள் பிள்ளை களை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர் கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரி செய்து வைத்து கொள்வது, கடைசி நேர  அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்ப டுத்தும். மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர்  போட்டோ - 10, ஸ்டாம்ப் சைஸ் போட்டோ – 4 ஆகியவற்றை எப்போதும் கையில் வைத்தி ருங்கள். மேலும் அவற்றை டிஜிட்டல் வடி விலும் வைத்திருப்பது சாலச்சிறந்தது. மாண வர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசியமய மாக்கபட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும். வங்கி  கணக்கு துவங்க பான் கார்டு இல்லாதவர்கள் விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும். பிறப்பு சான்றிதழ் (ஒரிஜி னல்) இல்லாதவர்கள் ஊராட்சி/நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப் பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி வைத்து  கொள்வது நல்லது. சாதி சான்றிதழ் இல்லாதவர்களும் / ஒரி ஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் இதுசமயம் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச்சான்று தற்போது கியூஆர் கோட் உடன் கூடிய டிஜிட்டல்/பிடிஎப் வடி வில் கொடுக்கப்படுகிறது. இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை. மேலும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க இது தேவை. பிறப்பிட சான்றிதழ் இல்லாதவர்கள் புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும். இச் சான்று தற்போது கியூஆர் கோட் உடன் கூடிய டிஜிட்டல் வடிவில் கொடுக்கப்படுகிறது. இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிபடுத்தி, பொறியியல்/மருத்துவக்கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தேவை.  முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை,  தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள் ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் தேவையுள்ளவர் கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். இது  பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித் தொகை மற்றும் வருவாய்வழி தேர்வுக ளுக்கு விண்ணப்பிக்க பயன்படும். முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றி தழ் தேவையுள்ள மாணவர்கள் இப்பொ ழுதே இ- சேவை மையங்கள் மூலம் விண் ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும். 1 - 2 வாரங்களுக்குள் கிடைத்துவிடும். நீட் தேர்வு  மற்றும் மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப் பிக்க விரும்புவர்கள் போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன்  செய்து வைத்திருக்க வேண்டும். மேலும் பெற் றோர்களின் சாதி சான்றிதழும் தேவை. பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை, மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேசன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காதவர்கள் இப்பொழுதே சேர்த்து கொள்வது நல்லது. மாணவர்களின் மாற்று சான்றிதழ், மற்றும் 10,11,12 ஆகிய வகுப்புபளுக்கான மதிப்பெண் சான்றிதழ் உட்படி எல்லா சான்றிதழ்களையும் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் அல்லது எல்லா சான்றிதழ்களையும் கணிப்பொறியில் பிடிஎப் வடிவில் சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 10 காப்பிகள் (ஜெராக்ஸ்) தேவை. தங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில்/ எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது. மாணவர்களின் பெயர்கள், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும், எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். கல்லூரி சேரக்கை தகவல்களை நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் அறிந்து வரவும். தற்பொழுது பெரும்பாலான கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு சேருவதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பெரும்பாலான தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை விண்ணப்ப விநியோகம்/ ஆன்லைன் பதிவை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. பிளஸ் 2 ரிசல்ட் வெளியான சில தினங்களில் பொறியியல் கலந்தாய்வு, பொது மருத்துவ கலந்தாய்வு மற்றும் வேளாண் படிப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி கடன் தேவைபடுவோர் நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தேசியமயமாக் கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளை அணுக வும். www.vidyalakshmi.co.in மற்றும் www.jansamarth.in ஆகிய இணையத ளம் மூலமாக தான் கல்விக்கடனுக்கு விண் ணப்பிக்க வேண்டும்.