தருமபுரி, செப்.22- பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடு தல் கட்டிடம் இல்லாததால், மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயிலும் அவல நிலை உள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலா புரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகி றது. ஆலாபுரம், நடூர், கள்ளியூர், அம்மாபாளையம், பட்டவர்த்தி, பறையப்பட்டி, நேரு நகர் உள் ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த மாணவ, மாணவி கள் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 1981 ஆம் ஆண்டு பள்ளி ஆரம்பிக்கப்பட்ட போது 108 மாணவ, மாணவிகள் கல்வி பயின்றனர். படிப்படியாக உயர்ந்து 2010 ஆம் ஆண்டில் 370 மாணவர்கள் சேர்ந்த நிலையில், தற்போது 231 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஆலாபுரம் உயர்நிலைப்பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகிறது. நல்ல பயிற்சி பெற்ற 15 ஆசிரியர்கள் உள்ள இப்பள்ளியில் போதிய கட்டிடங்கள் இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் பல வருடங்க ளாக பள்ளியின் வளாகத்தில் உள்ள மரத்தடியில் மண்ணில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதனால் மழை வெயில் மற்றும் காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் பள்ளி மாணவ, மாணவிகள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின் றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பள்ளி நடைபெறுவதால் இந்த பள் ளிக்கு குறைந்தபட்சம் 10 வகுப் பறைகள் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 6 வகுப்பறை கள் மட்டுமே உள்ளன. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளை ஆசி ரியர்கள் மைதானத்தில் உள்ள தரை யில் அமர வைத்து கல்வி கற் பித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் கள், வட்டார கல்வி அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, கூடுதல் வகுப் பறைகள் கட்டித்தர மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.