இளம்பிள்ளை, ஜூன் 30- சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள நடுவனேரி ஊராட்சி 3 ஆவது வார்டில் அரசு துவக்கப் பள்ளி இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 112 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மூன்று கட்டிடத்தில் ஏற்கனவே ஒரு கட்டிடம் மிகவும் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது. இந்நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வியாழனன்று, பள்ளிக்கு அழைத்து சென்றபோது, பள்ளியின் மேற் கூரை பெயர்ந்து கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பெற்றோர் கள் ஒன்று கூடி காக்காபாளையம் - இளம் பிள்ளை பிரதான சாலையில் அவ்வழியே வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இப் பள்ளி இரண்டு இடங்களில் செயல்பட்டு வரு கிறது. மூன்று கட்டடங்கள் உள்ள நிலையில் தற்போது இரண்டு கட்டடங்கள் பழுதாகி உள் ளது. இதனை இடித்து விட்டு நடுவனேரி ஊராட்சி மன்ற அலுவலக முன்பு உள்ள பள்ளி கட்டிடம் அருகே ஒரே இடத்தில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டி செயல்படுத்த வேண் டும். பள்ளி கட்டடத்தை அப்புறப்படுத்தக் கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் நடவ டிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கட்டிடம் சுற் றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்ற னர். மறியல் போராட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி காவல் துறையினர் மற்றும் மகுடஞ்சாவடி பிடி ஓக்கள் ராஜா, முத்துசாமி ஆகியோர் பொது மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 6 மாதத்திற்குள் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என வட்டார வளர்ச்சி ஆணையாளர் உறுதி அளித்தார். இதைய டுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இத னால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.