பொள்ளாச்சி, அக்.9- பொள்ளாச்சி பிஏபி திட் டத்தின் கீழ் புதிய ஆயக் கட்டு பாசனத்திற்கு அக் டோபர் 23 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க பிஏபி திட்ட அலுவலகத்தில் புத னன்று விவசாயிகள் மனு அளித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பிஏபி அதா வது பரம்பிக்குளம் ஆழி யார் பாசனத் திட்டத்தின் கீழ் பொள் ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுவட்டார கிராமங்கள், ஏறக்குறைய 2 லட்சத்திற் கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி கள் பெறுகின்றன. இந்நிலையில் ஆழி யார் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் பொள்ளாச்சி கால்வாய், சேத்துமடை கால்வாய் மற்றும் பீடர் கால்வாய், மண்டல பாசன பகுதிகளிலுள்ள வேட் டைக்காரன் புதூர் கால்வாய்களுக்கும் அக்டோபர் 23ம் தேதி முதல் தண்ணீர் திறக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக பொள்ளாச்சி உடு மலை சாலையில் அமைந்துள்ள பிஏபி திட்ட அலுவலகத்தில் ஆழியார் படுகை புதிய ஆயக்கட்டு விவசாயிகள் நலச் சங்கத் தின் தலைவர் ஏ.எச்.அசோக்குமார் தலை மையில் புதனன்று கோரிக்கை மனு அளிக் கப்பட்டது. இம்மனுவில் கூறியிருப்ப தாவது;- கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் படுகை புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 2079 கன அடி நீர் வழங்கப்பட்டது. அதை போலவே இவ்வாண்டும் வழங்க வேண்டு மென முன்னர் கோரினோம். ஆனால், தற்போது பிஏபி தடுப்பணை களிலுள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு 2042 கன அடிக்கு குறையாமல் வழங்க ஆவணம் செய்ய வேண்டும். மேலும், பாசன நீர் திறந்துவிடுவதற்கு முன்னரே பிரதான கால்வாய்களிலுள்ள செடி, முட்புதர்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் சீராக செல்ல வழி செய்யு மாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இம்மனு வினை பெற்றுக்கொண்ட பொள்ளாச்சி பிஏபி திட்ட அலுவலக உதவி பொறியா ளர் இது குறித்து கண்காணிப்பு பொறியா ளரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள் ளப்படுவதாக தெரிவித்தார்.