அவிநாசி, பிப்.19- அவிநாசி அருகே பழங் கரை ஊராட்சி மன்ற அதிமுக துணைத் தலைவர் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தலைவர் மனு அளித்துள் ளார். அவிநாசி ஒன்றியம் பழங் கரை ஊராட்சியானது பேரூ ராட்சிக்கு நிகரான வாக்கா ளர்கள் கொண்ட ஊராட்சியாக இருந்து வருகி றது. இதில், 12 வார்டுகள் உள்ளன. இரண்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உயிரிழந்து விட்டனர். இதைத்தொடர்ந்து 10 நபர்கள் மட் டுமே ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகின்றனர். அதிமுகவை சேர்ந்த கோமதி என்பவர் தலைவராகவும், நடராஜ் என்பவர் துணைத் தலைவராகவும் செயல் பட்டு வந்துள்ளார்கள். இந்நிலையில், துணைத் தலைவர் நட ராஜ் ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் ஊராட்சியில் வேலை நடைபெறுவதில்லை. இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தலைவர் உட்பட எட்டு பேர் கையொப்பமிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்யிடம் கொடுத்துள்ளனர். மேலும், இதனுடைய நகலை வட்டாட்சிய ருக்கும் வழங்க உள்ளனர்.