ஈரோடு, ஜூலை 26- மொடக்குறிச்சி அருகே பட்டி யலின மக்களை இழிவாக பேசிய 100 நாள் வேலைத்திட்ட அதிகாரி களை கண்டித்து, விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி ஒன்றியம், ஆனந்தம்பாளை யம் ஊராட்சி, நெறிபாறை என்ற ஊரில் சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஜூலை 8 ஆம் தேதியன்று, 100 நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அப்பகுதி பொது மக்கள் கலந்து கொண்டனர். அப் போது, அங்கு வந்த மக்கள் நலப் பணியாளராக வேலைசெய்யும் கோமதி என்பவர், “போராட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள்? இனி மேல் உங்களுக்கு 100 நாள் வேலை கொடுக்க முடியாது” என்றும், “உங் களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றால், என்னை யாரும் புடுங்க முடியாது” என்று மிரட்டி, பட்டியலின மக்களுக்கு 100 நாள் வேலையை மறுத்துள்ளார். இந்நி லையில், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் தலைமையில், ஆனந்தம்பா ளையம் ஊராட்சி மன்ற அலுவல கத்தை அப்பகுதி பொதுமக்கள் வெள்ளியன்று முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மொடக்குறிச்சி காவல் அதிகாரி கள், வருவாய்த்துறையினர், துணை வட்டார வளர்ச்சி அலு வலர், ஊராட்சி செயலர் ஆகியோர் போராட்டக்காரர்களு டன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட னர். அப்போது, 100 நாள் வேலைத் திட்ட பணித்தளப் பொறுப்பாளர் சுலோச்சனா என்பவர், மக்களை மிரட்டும் தொனியில் அதிகார மாக பேசினார். இறுதியில் மறுக் கப்பட்ட 100 நாள் வேலை நாளை முதல் மீண்டும் வழங்குவது, பட்டிய லின மக்களை இழிவாக பேசிய கோமதி மற்றும் சுலோச்சனா மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது என எழுத்துப்பூர் வமாக ஊராட்சி செயலர் உறுதி யளித்தார். அதனையேற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். முன்னதாக, இப்போராட்டத் தில் விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகாத் தலைவர் கே.கணேசன், செயலாளர் டி.தங்கவேல், சொங் கப்பன், சசி, முத்துசாமி, எம்.லோக நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.