உடுமலை, பிப்.12- பள்ளபாளையம் ஊராட்சி மன்ற அலுவல கம் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் யாரும் வேலைக்கு வராத நிலையில், பூட்டி உள்ளது. இதனால், ஊராக வேலை திட்டம் மற்றும் குடி நீர் விநியோகம் முடங்கி உள்ளதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உடுமலை தாலுகா பகுதியில் உள்ள பள் ளபாளையம் ஊராட்சியில் கொங்கலக்கு றிச்சி, சிவாநகர் பகுதிகளில் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த ஊராட்சியில் ஒன்பது வார்டு உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்க ளாக ஊராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் முறையாக நடைபெறுவது இல்லை என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்து உள்ளார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொது மக்களின் அன்றாட தேவையான குடி நீர், குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட முக் கிய வேலைகள் எதுவும் நடைபெறுவது இல்லை. கடந்த சில நாட்களாக அலுவலக மும் பூட்டி உள்ளது என தெரிவித்தனர். இது குறித்து உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது, பள்ளபாளையம் ஊராட்சி செயலாளருக்கு கடந்த ஒரு வாரம் உடல்நிலை சரியில்லாமல் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த அலுவ லகத்தில் அதிகாரிகள் ஆய்வும் செய்து உள் ளார்கள். சிகிச்சை முடித்து ஊராட்சி செயலா ளர் வேலைக்கு வந்து விட்டார். திங்கட்கி ழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு ஊராட்சி சம்பந்தமான வேலைக்கு சென்று உள்ளார் என்று கூறினார்.