districts

img

மக்கள் பிரதிநிதிகளை வேலை செய்ய விடாமல் தடுக்கும் ஊராட்சி அதிகாரிகள்

உடுமலை, டிச.27- உடுமலை தாலுகா, பள்ளபா ளையம் ஊராட்சியில் வேலைகளை திட்டமிட்டுத் தடுக்கும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் துறை ரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பள்ளபாளையம் கிளைகள் சார் பில் புதன்கிழமை பேருந்து நிறுத்தம்  அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உடுமலை ஒன்றியக்குழு உறுப்பி னர் குமரகுரு தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பள்ள பாளையம் ஊராட்சியில் மக்கள் நலன் சார்ந்த வேலைகளைச் செய்ய விடாமல் இருக்கும் ஊராட்சி செய லாளர் மீது, மக்களால் தேர்வு செய் யப்பட்ட பிரதிநிதிகள் ஊராட்சி நிர்வா கத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.  உடுமலை ஊராட்சி ஒன் றிய அதிகாரிகள்  நடவடிக்கை பஞ்சா யத்து ராஜ் சட்டத்திற்குப் புறம்பாக  உள்ளது. எனவே ஊராட்சியில் மக் கள் நலனைக் கண்டுகொள்ளாத ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகா ரிகள் மீது மாவட்ட நிர்வாகம் துறை  ரீதியான நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சரி செய் வேண்டும். சாக்கடைகளைத் தூய் மைப்படுத்த வேண்டும். பயன்படுத்த  முடியாத சாலைகளை சரி செய்வது டன், புதிதாக பள்ளபாளையம் சத்தி ரம் முதல் ஊருக்குள் செல்லும் வண் டிப்பாதையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும். பயன்பாட்டில் இல் லாத பழைய ஊராட்சி மன்ற கட்டி டத்தை ஊராட்சி ஒன்றிய பள்ளிக் குத் தானமாக தர வேண்டும். ஊராட்சி யில் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும். தகவல் பெறும் உரிமை  சட்டப்படி மனுவிற்கு ஊராட்சி நிர்வா கம் உரியப் பதில் தர வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன்  கண்டன உரையாற்றினார். ஒன்றியத்  செயலாளர் கனகராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாலதண்ட பாணி, ராஜகோபால், முருகவேல், ரங்கராஜ், ஜெகதீசன், அருண்பிர காஷ், தமிழ்தென்றல் மற்றும் கிளைச்  செயலாளர்கள் சுந்தரம், ரத்தினகு மார் உள்ளிட்ட திரளானோர் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டனர்.