சேலம், பிப்.14- உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக அமல்ப டுத்தி, பஞ்சப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழ கத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழி லாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். அதன்ஒருபகுதியாக சேலம் மாவட் டம், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மண் டலத் தலைவர் பி.என்.பழனிவேல் தலைமை வகித்தார். இப்போராட்டத் தில், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக அமல்ப டுத்தி, 98 மாத பஞ்சப்படியை உடனடி யாக வழங்க வேண்டும். பென்சனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். 2022 டிசம்பர் முதல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும், இறந்தவர்களுக்கும் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப் பப்பட்டன. இதில், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மண்டலச் செயலாளர் அன் பழகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன், மண்டலப் பொருளாளர் அழகேசன் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.