districts

img

நீரில் கரையும் உரம் பற்றிய துண்டுப்பிரசுரம் வேளாண் பல்கலைக்கழகம் வெளியீடு

கோவை, ஜூன் 25- நீரில் கரையும் உரங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வேளாண் பல்கலை கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி செவ்வாயன்று வெளியிட்டார்.  நீரில் கரையக் கூடிய உரங்கள் தொடர்பான பயனீட்டா ளர்களுக்கான கூட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வளாகத்தில் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பல்க லைக் கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்தார். இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியம் வரவேற்றார்.  இதில், பல்கலைக் கழக துணைவேந்தர், கீதாலட் சுமியின் பேசியதாவது, தமிழக மண் வளம், தமிழக மண்ணில் ஊட்ட சத்துக்களின் பற்றாக்குறை, சர்வதேச, தேசிய மற்றும் தமிழக அளவில் உர உற்பத்தி, மற்றும் உர நுகர்வு பயன்பாடு, நீரில் கரையக் கூடிய உரங்களின் முக்கியத்து வம் மற்றும் அதன் நன்மைகள் பற்றி பேசிய அவர், பயனீட்டா ளர்கள் இணைந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் நீரில் கரையக் கூடிய உரங்களை விவசாயிக ளிடம் சென்றடைய ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நீரில் கரையும் உரம் பற்றிய துண்டுப்பி ரசாரங்களையும், மண்ணியல் துறைப்பற்றிய சிற்றேட் டையும் துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார்.