districts

img

திறப்பு விழாவிற்கு தயாராகும் பள்ளிபாளையம் மேம்பாலம்

நாமக்கல், ஜன.20- ரூ.300 கோடியில் கட்டப்பட்ட பள்ளிபாளையம் மேம்பாலம் விரை வில் திறக்கப்படவுள்ளதால், வாகன  ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தின் எல்லை பகுதியை ஈரோட்டில் இணைக்கும் வகையில் பள்ளிபாளையம் அமைந்துள்ளது. இதன் சுற்றுவட்ட பகுதி முழுவதும் விசைத்தறித் தொழில் பிரதானமாக உள்ளது. பள்ளிபாளையத்திலிருந்து உற்பத்தி யாகும் ஜவுளிகள் பல்வேறு மாவட் டங்களுக்கும், மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் அருகிலே இருப்ப தால் தினசரி ஈரோட்டிற்கு பல்வேறு  பணிகளுக்கும், பல்வேறு பொருட் களை விற்பனை செய்வதற்கும் பொதுமக்களும், வியாபாரிகளும் சென்று வருகின்றனர். மேலும், பள்ளி பாளையம் வழியே ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், கோவை,  திருச்சி உள்ளிட்ட பல்வேறு தமிழகத் தின் பல்வேறு முக்கிய மாவட்டங் களை இணைக்கும் பிரதான சாலை யாக இப்பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நக ரில் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு  ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக உரிய நேரத்தில் உரிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வந்ததையடுத்து, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில்,  பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் டீச்சர்ஸ் காலனி சாலைகளில் இருந்து காவிரி ஆற்று பாலம் வரை யிலும் புதிதாக மேம்பாலம் அமைக் கும் பணி நடைபெற்றது. கடந்த  மூன்று ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலை யில், தற்போது நிறைவு பெற்றுள் ளது. தற்போது மேம்பாலம் பகுதி யில் மீதமுள்ள சிறிய அளவிலான பணிகள் மற்றும் வெள்ளை வர்ணம்  பூசும் பணிகள், சிக்னல் விளக்குகள்  அமைக்கும் பணி, வேகத்தடை  அமைக்கும் பணி உள்ளிட்டவை கள் துரித கதியில் நடைபெற்று வரு கிறது. பிப்ரவரி மாத துவக்கத்தில் மேம்பாலம் திறக்கப்படும் என கூறப் பட்டுள்ள நிலையில், இப்பாலம் திறக்கப்பட்டால் பள்ளிபாளையம் நகரில் போக்குவரத்து பாதிப்பு இல் லாத நிலை ஏற்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.