தருமபுரி, நவ.10- அரசு ஊழியர் சங்கத்தின் பாலக்கோடு வட்ட மாநாடு ஞாயி றன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்ட 15 ஆவது மாநாடு, பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிறன்று, வட்டத் தலைவர் தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது. இணைச்செயலாளர் சதீஷ்குமார் வரவேற்றார். மாவட்டத் தலைவர் எம்.சுருளிநா தன் துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் ஜே.மாணிக் கம், பொருளாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.குணசேகரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப் படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதிய மும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.