districts

img

சிபிஎம் அரூர் ஒன்றியச் செயலாளராக பி.குமார் தேர்வு!

தருமபுரி, நவ.2- மார்க்சிஸ்ட் கட்சியின் அரூர்  ஒன்றியச் செயலாளராக பி. குமார் தேர்வு செய்யப்பட்டுள் ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் ஒன்றிய 24  ஆவது மாநாடு, காமாட்சியம் மன் திருமண மண்டபத்தில் தோழர்கள் என்.சங்கரய்யா,  சீத்தாராம் யெச்சூரி ஆகியோரது நினைவரங் கத்தில் சனியன்று நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.நேரு, எஸ்.தன லட்சுமி, சி.பழனி ஆகியோர் தலைமை வகித்த னர். மூத்த தோழர் சி.சிங்காரம் செங் கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு  உறுப்பினர் கே.என்.ஏழுமலை அஞ்சலி தீர் மானத்தை வாசித்தார். ஒன்றியக்குழு உறுப்பி னர் எஸ்.கே.கோவிந்தன் வரவேற்றார். மாநில  செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் துவக்க வுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் பி. குமார் அறிக்கையை முன்வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், தருமபுரி  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச் சுணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம் மாநாட்டில், காவிரி, தென்பெண்ணை உபரி நீர் திட்டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டும். தீர்த்த மலையை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றிய மாக அறிவிக்க வேண்டும். செனாக்கல் பாசன கால்வாய் திட்டம், கோட்டப்பட்டி கல்லாறு  அணை கட்டும் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். அரூரில் அரசு வேளாண்மை கல்லூரி,  கூட்டுறவு மரவள்ளி கிழங்கு ஆலை, நெல்  கொள்முதல் நிலையம், அரசு கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் அமைக்க வேண்டும். சிட்லிங் பகுதியில் பழங்குடி மக்க ளின் நிலங்களை அபகரித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்துள்ளதை ரத்து  செய்து, மீண்டும் பழங்குடி மக்களுக்கே நிலங் களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் அரூர் ஒன்றி யச் செயலாளராக பி.குமார் மற்றும் 13 ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டச் செயலாளர் ஏ.குமார் நிறைவுரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப் பினர் வி.ஜெயகாந்தன் நன்றி கூறினார்.