districts

img

சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது

திருப்பூர், செப்.23- சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு  தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அங்கேரிப்பாளையத்தில் இயங்கும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங் கில் பணி புரியும் சுமைப்பணி தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய அட்டி கூலி உயர்வை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங் கவில்லை. உடுமலைப் பேட்டை, தாராபுரம்,  பல்லடம் ஆகிய கிடங்குகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கி வரும் நிலையில், அங்கேரிப்பளையம், அவி நாசி, ஊத்துக்குளி ஆகிய கிடங்குகளில் அட்டி கூலி உயர்வு வழங்கப்படாமல் உள் ளது. இந்நிலையில், டிஎன்சிஎஸ்சி நிறுவ னத்தில் இயங்கும் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள்,  கிடங்கு பொறுப்பாளர்கள், கூட் டுறவு சங்க நிர்வாகி மற்றும் போக்குவரத்து ஒப்பந்ததாரர் பிரதிநிதியுடன் பேச்சுவார்த்தை  அங்கேரிப்பாளையம் கிடங்கில் நடைபெற் றது.  தொழிலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகி கள் கூடி பேச்சுவார்த்தையில் உடன்பாடு  ஏற்படும் வரை கிடங்குகளில் போக்குவரத்து  சட்டப்படி ஒரு லாரிக்கு 9 டன் மட்டும் ஏற்றுவது  என்றும், 10 சுமைப்பணி தொழிலாளி ஒரு  நாளைக்கு என்ன சுமக்க முடியுமோ அந்த  அளவே ஏற்றுவது என முடிவு செய்யப்பட் டுள்ளது.  இந்த பேச்சுவார்த்தையில், அங்கேரிபா ளையம் கிடங்கு தர ஆய்வாளர் முத்து வீரமணி, கிடங்கு 2 தர ஆய்வாளர் பாஸ்கர்,  சிஐடியு டிஎன்சிஎஸ்சி சங்க மாநிலப்பொருளா ளர் எம். ஏழுமலை, செஞ்சுடரமணி, மண்டல  தலைவர் மணிமாறன், மண்டல செயலாளர் செந்தில் குமார் மற்றும் ஏஐசிசிடியு தொழிற் சங்கம் சார்பில் செந்தில், கூட்டுறவு துறை  சார்பாக சுரேஷ் குமார், உதவி மேலாளர் பாலு,  கூட்டுறவு துறை போக்குவரத்து ஒப்பந்ததா ரர் பிரதிநிதி தினேஷ், சிபிஐஎம்எல் முத்து கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.