கோவை, ஜூன் 25- கோவை மாநகரில் உள்ள தூண்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப் பட்டு, ஓவியங்கள் வரையப்படும் செயல் வர வேற்பை பெற்றுள்ளது. கோவை மாநகரில் உள்ள மேம்பாலங் களில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சியினர், அமைப்பினர் உட்பட பலரும் சுவ ரொட்டிகளை ஒட்டினர். இதனால் அந்த சுவர் களின் முகமே முற்றிலும் மாறி போய் காணப் பட்டது. சில பாலங்களில் மக்கள் முகம் சுளிக் கும் வகையிலும் சுவரொட்டிகள் இடம் பெற்று இருந்தன. கோவையில் உள்ள காந்திபுரம் மேம்பாலம், திருச்சி மேம்பாலம், அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை, ஜி.பி.சிக்னல், 100 அடி ரோடு உள்ளிட்ட அனைத்து இடங் களிலும் உள்ள மேம்பால தூண்களில் சுவ ரொட்டிகளாகவே காணப்பட்டன. இதற்கி டையே மாநகரில் உள்ள மேம்பால தூண் களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தர விட்டார். அதனை மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். சுவரொட்டிகளுக்கு பதிலாக மக்களுக்கு பிடித்தமான, அவர்களது பழைய நினைவு கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் பல பொருட்கள்,
விலங்கு களின் உருவங்களையும் ஓவியமாக வரைந் தால் சுவர்களும் சுத்தமாக இருக்கும். மக்க ளும் அதனை கண்டு வியந்து செல்வார்கள் என்ற எண்ணம் தோன்றவே அதனை செயல் படுவத்தற்கான நடவடிக்கை எடுக்கப்பட் டது. அதன்படி ஓவிய ஆசிரியரான விக்னேஷ் ஜெயக்குமார் தலைமையிலான அவரது குழு வினர், கோவையில் உள்ள அனைத்து மேம் பால தூண்களிலும் வண்ண, வண்ண ஓவியங் களை வரைந்து வருகின்றனர். அதில் முதற் கட்டமாக காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் சுவரொட்டி கள் அனைத்தையும் அகற்றி விட்டு, அந்த இடத்தில் சுவரொவியங்கள் வரைய தொடங் கினர். அந்த பாலத்தில் உள்ள ஒவ்வொரு தூணிலும் பல வண்ண ஓவியங்களை வரைந் துள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் எல்லோருக்கும் பயணிக்க விரும் பும் உதகை மலை ரயில் வரையப்பட்டுள் ளது. இதுதவிர 5 சி சிட்கோ பேருந்தையும் தத் ரூபமாக வரைந்துள்ளனர். மேலும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், யானைகள் காப்பகம் போன்றவற்றை இந்த தூண்களில் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் வரையப்பட்ட பின்னர் அந்த சுவர்கள் வண்ணமயமாக ஜொலித்து கொண்டிருக்கிறது. அந்த வழியாக வாகனங் களில் செல்பவர்களுக்கும், நடந்து செல்ப வர்களுக்கும் அதன் முன்பு நின்று புகைப் படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.