தருமபுரி, ஆக.17- நமது காவிரி, நமது உரிமை என் கிற முழக்கத்தோடு தருமபுரியில் மார்க் சிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ள நடை பயணத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காவிரி உபரிநீரை மாவட்ட ஏரி களில் நிரப்பிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் 2ஆவது நாள் நடை பயணம் வியாழனன்று பென்னாகரம் பேருந்து நிலையத்திலிருந்து துவங் கியது. நடைபயணத்திற்கு, மாவட்ட செய லாளர் ஏ.குமார் தலைமை ஏற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் துவக்கி வைத்தார். முன்னதாக, பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் சுபேதார் தலைமையில் நடைபயணத் திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு சார்பில் போக்குவரத்து கழக மத்திய சங்க நிர்வாகி மனோன் மணி தலைமையில் வரவேற்பு அளிக் கப்பட்டது. நாகதாசம்பட்டியில் சிஐடியு ஆட் டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜகோபால் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நடைபயணம் செல் லும் வழிநெடுக பொதுமக்கள் உற் சாக வரவேற்பு அளித்தனர். இந்த நடைபயணத்தில், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.சிசுபாலன், மூத்த தலைவர் பி. இளம்பரிதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், எம்.மாரி முத்து, எம்.முத்து, சி.நாகராசன் ,சோ.அருச்சுணன், வே.விசுவநாதன், ஆர்.ஜோதிபாசு, ரவி, ஆர்.சின்னசாமி, ஆர். மல்லிகா மற்றும் மாவட்டக்குழு உறுப் பினர்கள் ஆ.ஜீவானந்தம், குமார், அன்பு, முருகன், சுதா, செல்லன், ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, புதனன்று பென்னா கரம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பங் கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், உலக நாடுகள் மழைநீரை அதிகபட்ச மாக சேமிக்கின்றனர். எல்லா ஜீவநதி களும் ஓடுகின்ற இந்தியாவில் 6 சத விகித மழைநீரை மட்டுமே சேமிக்கப் படுகிறது.
மீதம் உள்ள நீர் கடலில் கலக் கிறது. மனிதவள மேம்பாட்டில் 132வது இடத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது. ஒன்றிய அரசு காவிரி நீரை மக்கள் பயன்படுத்தக்கூடாது என்கிறது. இந்த அரசு யாருக்கானது என்கிற கேள்வி எழு கிறது. 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது மோடி அரசு, ஊழலை ஒழிப் போம், 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம், விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு ஒன்னரை மடங்கு மதிப்பு உயர்த்தி தருவதாக சொன் னார்கள். இதை எதையும் செய்ய வில்லை. 2019ஆம் ஆண்டுத் தேர்தலில் தீவிரவாதம், பயங்கரவாதத்தை ஒழிப் போம் என்றார் மோடி. எதுவுமே ஒழிக்கப் படவில்லை. ஆனால், வரும் நாடாளுமன்ற தேர் தலை எதிர்கொள்ள பாஜக, மணிப்பூரில் குக்கி, மெய்தி மக்களிடையே வன் முறையை தூண்டிவிட்டது. அதனை தொடர்ந்து ஹரியானா, உத்திரபிர தேசம், குஜராத் போன்ற மாநிலங் களில் மத பிரிவினை வாதத்தை தூண்டு கிறது. தமிழ்நாட்டில் யாத்திரை என்ற பெயரில் வன்முறை தூண்ட பாஜக முயற்சிக்கிறது. இதற்கு ஒரு போதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பயங் கவாதத்தை வேரறுப்போம் என சொன் னவர் மோடி. தற்போது மதமோதல், இனமோதலை ஏற்படுத்தி வருகிறார். கார்ப்பரேட்டுகளுக்கான இந்தியாவை மோடி பாதுகாக்கிறார். இன்னொரு புறம் ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டு இருக்கின்றனர். இந்த ஏழை மக்களுக்களை காப்பாற்ற மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது என தெரிவித் தார்.