districts

img

மூளைச்சாவு: உடலுறுப்புகள் தானம்

சேலம், நவ.23- மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடலுறுப்புகள் தான மாக பெறப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம். கல்வராயன்மலை, தும்பை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் சம்பத்குமார், கடந்த  நவ.20 ஆம் தேதியன்று சாலை விபத்தில் மூளைச்சாவு  அடைந்தார். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு, அவரது சிறு நீரகம், கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டன. இதைய டுத்து வாலிபரின் உடலுக்கு சேலம் அரசு மருத்துவமனை யில், மருத்துவமனை முதல்வர் தேவி மீனாள் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் அரசு மரியாதை செலுத்தி, உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.